கோவையை சேர்ந்த ஆக்டகன் ஃபைட் கிளப்பில் பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான முய் தாய் பாக்சிங் போட்டியில் 8 தங்கம் 7 வெள்ளி என 15 பதக்கங்கள் வென்று அசத்தல்

கோவையை சேர்ந்த ஆக்டகன் ஃபைட் கிளப்பில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான   முய் தாய்  பாக்சிங் போட்டியில் 8 தங்கம் 7 வெள்ளி என 15 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்…

கோவை கரும்புகடை பகுதியில் செயல்பட்டு வரும் ஆக்டகன் ஃபைட்ஸ் கிளப் சார்பாக அதன் நிறுவனர் ஃபெரோஸ் பாபு தலைமையில்  கிக் பாக்சிங்,முய்தாய் பாக்சிங் என தற்காப்பு கலைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பலர் பயிற்சி பெற்று மாவட்ட,மாநில,தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில்,   இந்திய மற்றும் தமிழ்நாடு முய் தாய் பாக்சிங் அமெச்சூர் சங்கத்தின் சார்பாக மூன்றாவது மாநில அளவிலான பாக்சிங்  போட்டி  சென்னை ஆவடியில் நடைபெற்றது..சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,கோவை,சேலம்,ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.வயது,எடை,ஓபன் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில்,கோவை ஆக்டகன் ஃபைட்ஸ் கிளப்பை சேர்ந்த 15 பேர் கலந்து  முறையே எட்டு தங்கம்,ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.இதே போல இதில்  இன்னொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில்  தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்..வெற்றி பெற்று  கோவை திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் ,பயிற்சியாளர்கள் ஃபெரோஸ் பாபு,சபரி,சிக்கந்தர் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்..தொடர்ந்து கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவ,மாணவிகள் வரும் காலங்களில் வெற்றிகளை குவிப்போம் என நம்பிக்கை தெரிவித்தனர்…

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி