குடியரசு தினத்தை முன்னிட்டு சிறந்த சேவைக்காக கோவை மாவட்ட ஆட்சியர் கையால் விருது

கோவையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களில் சிறந்த சேவை செய்ததற்காக ஜோட்டிகுரியன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது பணி மற்றும் சமூக சேவையில் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார் கோயம்புத்தூர் நெடுஞ்சாலை பிரிவில் கோட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஜோட்டிகுரியன் அவர் 1996 இல் நெடுஞ்சாலைத் துறையில் சேர்ந்தார் தர்மபுரி கோபிசெட்டிபாளையம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். குருவாயூர் அருகேயுள்ள திருச்சூர் சிட்டாட்டுக்கரையைச் சேர்ந்தவர்  இப்போது சூலூர் காங்கயம்பாளையதில் குடியிருந்து வருகிறார் இவரது மனைவி ஜீனா இந்திய விமானப்படையில், சூலூரில் சிவில் கெஜட்டட் அதிகாரியாக பணிபுரிகிறார் இவருக்கு இரண்டு குழந்தைகள் ஜெரோம் மற்றும் ஜாயல் என்பது குறிப்பிடத்தக்கது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!