டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்த அமலாக்கத் துறையை கண்டித்தும், ஜனநாயக படுகொலை செய்த பாஜகவை கண்டித்தும் கோவை மண்டலம் சார்பாக கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பாக கோவை மண்டல வி.சி.க தலைவர் சுசி கலையரசன், தமிழ் புலிகள் கட்சி மேற்கு மண்டல செயலாளர் .கோவை குமார், திராவிடர் கழக தலைவர் .ராமகிருஷ்ணன், சமூக விழிப்புணர்வு இயக்க தலைவர் வழக்கறிஞர் J.D.சாக்ரடீஸ், கிறிஸ்துவ ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் .ஸ்டீபன் ராஜ் மற்றும் .டிசில்வா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
ஆம் ஆத்மி கட்சி கோவை மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் சார்லஸ் ஆண்டனி, பொள்ளாச்சி சட்டமன்ற பொறுப்பாளர் ஸ்ரீமனோஜ் குமார், கோவை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ரமேஷ் மந்திரி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற பொறுப்பாளர் சாந்து முகமது, கவுண்டம்பாளையம் சட்டமன்ற பொறுப்பாளர் சண்முகசுந்தரம், கோவை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் லோகேஷ், குனியமுத்தூர் பகுதி பொறுப்பாளர் ஆண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆம் ஆத்மி கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் .குமார், இணை செயலாளர் S.P.சிவசங்கர், பல்லடம் பொறுப்பாளர் .மணிதாஸ், அவிநாசி பொறுப்பாளர் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்
கோவை மாவட்ட செயலாளர் சார்லஸ் ஆண்டனி இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் ஆர்ப்பாட்டமாக வெற்றியடைய செய்ய அனைவரையும் ஒருங்கிணைத்தார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!