ஆவனங்கள் இன்றி இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்புள்ள இஞ்சி பறிமுதல் - சுங்கத்துறையினர் நடவடிக்கை.!


 ஆவனங்கள் இன்றி இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்புள்ள இஞ்சி பறிமுதல் - சுங்கத்துறையினர் நடவடிக்கை.!

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து ஒரு கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நின்றிருந்த படகில் சோதனையிட்ட சுங்கத்துறையினர், 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2,460 கிலோ இஞ்சியை கைப்பற்றினர். இலங்கைக்கு கடத்த முயற்சித்த மூவரிடம் விசாரணை நடக்கிறது.

இலங்கையில்  வரலாறு காணாத அளவுக்கு இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதால் தமிழகத்திலிருந்து இஞ்சி கடத்தல் அதிகரித்துள்ளதாக இஞ்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, ஒரு கிலோ உலர் இஞ்சியின் விலை இலங்கை ரூபாய் 3000 த்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ850 ஆகும்

தற்போதைய சூழநிலையில், இலங்கையில் இஞ்சி தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால் விலை அதிகாரித்து உள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!