சூலூரில் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிசத் ஒன்றிய செயற்குழு

சூலூரில் தமிழ்நாடு விசுவ ஹிந்து  பரிசத் ஒன்றிய செயற்குழு கூட்டம் 24-7-2024 ஆம் தேதி மாலை 7 மணிக்கு பெருமாள் கோவில் திடலில் மாவட்ட இணை செயலாளர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்புரை  மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் கலந்துகொண்டார் செயற்குழுவில் நாகராஜ் மாவட்ட இணை செயலாளர், கிருஷ்ணமாச்சாரி மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர்,  காளிமுத்து நகர இணைச் செயலாளர்,  பிரகாஷ் ஒன்றிய இணைச் செயலாளர், முருகன்  பூசாரி பேரவை பொறுப்பாளர் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1)செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நிறைவு விழாவான விஜர்ஜன விழாவிற்கு விஸ்வ ஹிந்து பரிசத் மாநில தலைவர் ஆர்.ஆர் கோபால்ஜியை அழைப்பது 2)சூலூரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒண்டிப்புதூரிலிருந்து சூலூர் ஏரோ வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் 3)கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உண்டான நிதியை இந்த பாராளுமன்ற கூட்ட தொடரிலேயே ஒதுக்க வேண்டும்  4)தமிழகத்தில் உள்ள இந்து கோவிலுக்கு தமிழக அரசு அதிகமாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்  5)மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் போதை விழிப்புணர்வு  பிரச்சாரத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்பட பல கோரிக்கைகள் இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!