Posts

Showing posts from April, 2025

மலைமக்களின் குலதெய்வம் அல்மோரா நந்தாதேவி!

Image
இந்தியாவின் இரண்டாவது உயரமான மலைச்சிகரம் தான் நந்தா தேவி. உத்தரகண்ட் மாநிலத்தின் பெருமையாக, கம்பீரமான அடையாளமாக நிற்கிறது. 25 ஆயிரத்து 63 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கர்வால் இமயமலையின் மேற்கு கிளையின் ஒரு பகுதியாகும். இந்த சிகரத்தின் சுற்றுப்பகுதியில் நந்தாகினி நதி உற்பத்தியாகி ஓடுகிறது.   இந்த நந்தாதேவி சிகரமானது துர்க்கையின் வடிவமாகும். இமயமலையின் பல்வேறு மலைக்கிராமங்களில் நந்தாதேவி கும்பிடப்படுகிறார். அப்படி வழிபடப்படும் ஒரு முக்கியமான இடம் தான், உத்தரகாண்டில் அல்மோராவில் உள்ள நந்தாதேவி கோவிலாகும்.  நந்தா தேவியைப்பற்றி ஸ்ரீ தேவி பகவத் புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் துர்கா சப்தசதி போன்ற பண்டைய நூல்கள் குறிப்பிடுகின்றன.   சைலபுத்ரி என்றும் அழைக்கப்படும் நந்தா தேவி இமயமலையின் மகளாக கருதப்படுகிறார். பார்வதி தேவியின் ஒன்பது வடிவங்களில் ஒன்றாகும். இயற்கையின் தெய்வமான நந்தாதேவி மலை மக்களையும் நிலத்தையும் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. அவரை குலதெய்வமாக கும்பிடுகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, நந்தா தேவி சந்த் மன்னர்கள் நந்தாதேவியை குல தெய்...

இமயமலையில் சூரியனுக்கு இருக்கும் ஒரே கோவில் தெரியுமா? நோய்கள் தீர்க்கும் காதர்மால் சூரியனார் கோவில்!

Image
வேதகாலத்துக்கு முன்னரே இந்த உலகத்தின் இயக்க சக்தியான சூரியனை நமது முன்னோர்கள் கும்பிட்டு வந்திருக்கிறார்கள். நமது வாழ்வியல், கலாச்சாரத்தோடு சூரிய வழிபாடு மிகவும் தொடர்புடையதாக இருந்து வந்து இருக்கிறது. அந்த அடிப்படையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சூரியன் கோவில்களும் கட்டப்பட்டு இருக்கின்றன. நமது பாரதத்தில் மொத்தம் ஆறு சூரியனார் கோவில்கள் இருக்கின்றன. தமிழகத்தில் நவகிரக கோவில்கள் வரிசையில் கும்பகோணத்தில் சூரியனார் கோவில் உள்ளது. அடுத்ததாக ஒடிசாவின் கோனார்க்கில் சூரியனார் கோவில் உள்ளது. காஷ்மீரின் அனந்தநாக்கில் பல நூற்றாண்டுகள் கடந்த சூரியனார் கோவில் உள்ளது; அது சிதிலமடைந்து இருக்கிறது. குஜராத்தின் மொதீராவில் ஒரு சூரியனார் கோவிலும், குஜராத்தில் உள்ள கும்ளியில் நவகிரக சூரியர் கோவிலும் உள்ளது. உத்தரகாண்டின் காதர்மாலில் ஒரு சூரியனார் கோவிலும் உள்ளது.  இது தவிர 1988ல் மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் ஜி.டி.பிர்லாவால் ஒரு சூரியர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதையும் சேர்த்தால் இந்தியாவில் சூரியனுக்கு 7 கோவில்கள் உள்ளன.  இவற்றில் நாம் காண இருக்கிற காதர்மால் சூரியன் கோவிலானது மிகவும...

பைரவரின் அவதாரமாக அருளும் நீதிதேவன் கொலுதேவ்தா!.. பித்தளை மணி தோரணங்கள் வரவேற்கும் அற்புத கோவில்!

Image
இமயமலையின் ஃபைன் மரக்காடுகள் வழியாக மிதமான சீதோஷ்ண நிலையில் பயணித்தால் அல்மோரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சித்தை கொலு தேவ்தா கோவில். கொலு தேவதை என்றதுமே நம்மவர்கள் பெண் தெய்வம் என்றே நினைப்போம். ஆனால் கொலு ஒரு ஆண் தெய்வமாக இருக்கிறார்.  கிட்டத்தட்ட கி.பி.500 ஆம் ஆண்டில் இருந்து 1200க்கு உட்பட்ட காலத்தில், இமயமலையின் குமாவோன் பகுதியை ஆண்ட சந்த் மன்னர்களின் காலத்தில் அப்பகுயின் மன்னராக வாழ்ந்து நீதி வழங்கியவர் தான் கொலு தேவ்தா. இவர் கத்யூரி வம்சத்தை சேர்ந்தவர், சூர்யவம்சத்தை சேர்ந்தவர் என கருத்துகளும், இவரது தோற்றம் பற்றிய வெவ்வேறு கதைகளும் உண்டு. கத்யூரி மன்னர் வம்சத்தில் பிறந்த தெய்வக்குழந்தையாக கருதப்பட்டு மன்னராகி, பின்னர் கடவுளுமாகியவர் கோலு.  இவரை கொலு தேவ்தா, கோலு, கோல்ஜ்யூ என்று பல்வேறு பெயர்களின் இப்பகுதி மக்கள் வணங்குகிறார்கள். கொலு தேவ்தா கெளர் பைரவரின் அவதாரமாக கருதப்படுகிறார். நீதிதேவனாக மக்கள் வணங்குகிறார்கள்.   கொலுதேவ்தா   ஜால் ராய் என்கிற மன்னருக்கும் மற்றும் ராணி கலிங்காவுக்கு பிறந்த மகனாகவும்,  கத்யூரி மன்னர...

சர்வதேச தடகளப்போட்டிக்கு திருப்பூர் வீராங்கனை ஸ்ரீவர்த்தினி தேர்வு

Image
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இந்திய அளவில் அனைத்து பல்கலைக்கழகங்கள் இடையே நடந்த தடகள போட்டிகளில்  திருப்பூர் ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த வீராங்கனை  எஸ்.கே.ஸ்ரீ வர்த்தினி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 1:32 மணிக்குள் ஓடி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.  இதன் மூலம் இவர் வருகிற ஜூலை 16-ல் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் உலக சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வாகி திருப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளார். பயிற்சியாளர் அழகேசன் உள்ளிட்டோர் வீராங்கனை எஸ்.கே.ஸ்ரீ வர்த்தினிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

இமாலயத்தில் அழகும், புனிதமும் நிறைந்த இடம்... நைனிதால் ஏரி - நைனாதேவி கோவில்!

Image
கடவுளின் தேசமான உத்தரகாண்டில் ஒரு அருமையான சீதோஷ்ணத்தில் அமைந்த ஒரு அழகிய ஏரிதான் நைனிதால் ஏரி. அழகும், புனிதமும் நிறைந்த இந்த நைனிதால் ஏரிக்கரையில்  நைனா தேவி கோவில் அமைந்திருக்கிறது. 51 சக்திபீடங்களில் முக்கியமானதாக இருக்கக்கூடிய இடம் இது. சதிதேவியின் கண்கள் விழுந்த பகுதி இந்த நைனிதால் ஏரிதான். கண்களில் இருந்து வழிந்த கண்ணீரால் இந்த நைனிதால் ஏரி உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. கண் வடிவத்தில் மலைகளுக்கிடையில் அழகால் நம்மை ஈர்க்கக்கூடிய  நைனிதால் ஏரிக்கரையில் நைனாதேவி கோவில் அம்சமாக அமைந்திருக்கிறது. நைனாதேவியை நந்தாதேவி என்றும் அழைக்கிறார்கள்.  உத்தரகாண்ட் மாநிலத்தில்  நைனிடால்  நகரத்தின்  மத்தியில் அமைந்துள்ள ஒரு இயற்கை நன்னீர் ஏரி ஆகும்.  காத்கோடம் மற்றும் ஹல்த்வானி ரயில் நிலையங்களில் இருந்து சுமாராக  1 மணி நேர பயணத்தில் செல்ல முடியும். நமது ஆதி கைலாஷ் யாத்திரையில் நாம் காணக்கூடிய முக்கியமான சக்திபீடம் நைனிதால் ஆகும்.  நைனிதால் ஏரியும், நைனாதேவி கோவிலும் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களால் கும்பிடப்பட்டு வந்திருக்கிறது...

Sacred place for Connecting with God... பாதாளபுவனேஷ்வர் குகைக்கோவில்!

Image
பல அதிசயங்களை தன்னுள் வைத்திருக்கும் இமயமலையின் மடியில் யுகங்களை கடந்து கும்பிடப்படும் ஒரு அற்புதமான கோவில்தான் பாதாள புவனேஷ்வர் கோவில்.  இந்த யாத்திரையில், மலைமேல் ஏறி உயர உயரச்செல்லும் நமக்கு, மலை இடுக்கில் மண்ணுக்குள் புதைந்திருக்க கூடிய ஒரு அற்புதமான லைம்ஸ்டோன் குகைதான் பாதாள புவனேஷ்வர் குகை கோவில். 12 லட்சம் ஆண்டுகளைக் கொண்ட திரேதாயுகத்திலேயே இந்த குகைக்கோவிலை சூர்ய வம்ச அரசனான ரிதுபர்ணா என்பவர் கண்டுபிடித்து சாமிதரிசனம் செய்திருக்கிறார். தற்செயலாக ரிதுபர்ணா சென்றபோது இந்த குகைக்குள் ஆதிசேஷனே வழிகாட்டியாக அழைத்துச் சென்று கடவுளர்களை காட்டியதாக நம்பப்படுகிறது. 33 கோட்டி தேவர்களும் இந்த குகையில் அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது.  ரிதுபர்ணாவுக்கு பிறகு மறைந்து போன பாதாள புவனேஷ்வர் குகையை துவாபர யுகத்தின் இறுதியில் பஞ்சபாண்டவர்கள், தரிசனம் செய்து இருக்கிறார்கள். பஞ்சபாண்டவர்கள் சொர்க்கத்தை அடைய பத்ரிநாத் அருகில் உள்ள மனா கிராமத்தில் ஸ்வர்கரோஹிணி வழியாக சொர்க்கத்தை சென்றடையும் முன்னர் பாதாள புவனேஷ்வரில் சிவபெருமானை தரிசனம் செய்ததாக குறிப்பிடுகிறார்கள்.  அப்புறம் இந்த குகை ப...

உக்கிர காளியை சாந்தப்படுத்திய ஆதிசங்கரர் ... ஹாத் காளிகா - கங்கோலிஹாட்

Image
நாம் செல்லும் ஆதிகைலாய ஓம்பர்வத யாத்திரையில், கயிலைமலைவழிச்சாலையில் அற்புதமான கோவில்களை காண இருக்கிறோம். அப்படி ஒரு முக்கியமான கோவில்தான் ஹாத் காளிகா மகாகாளி கோவில்.8ம் நூற்றாண்டில் இந்த கோவில் நிறுவப்பட்டு இருக்கிறது. ஆதிசங்கரர் கால்நடைப்பயணமாக நேபாளத்தின் பசுபதிநாத் கோவிலில் இருந்து, கேதர்நாத் செல்லும்போது பல்வேறு மலைகளை நடந்தே கடந்து சென்றிருக்கிறார்.  அப்போது, ஒருபக்கம் சரயு நதியும், மறுபக்கம் ராம்கங்கா நதியும் பாய்கின்ற அழகான மலைக்கிராமமான கங்கோலிஹாட் என்ற ஊருக்கு சென்றிருக்கிறார். தேவதாரு மரங்கள் நிறைந்த மலைக்கிராமமான கங்கோலிஹாட்டில், அங்குள்ள மக்கள் காளிதேவியின் உக்கிரத்திற்கு அஞ்சி வாழ்ந்து வந்தது தெரியவர, மகாகாளியை ஒரு எந்திரத்தில் சாந்தப்படுத்தி, ஹாத் காளிகா என்கிற இந்த கோவிலை நிறுவி உள்ளார். ஆதிசங்கரர் வருகைக்கு பின்னர் மக்கள் அச்சமின்றி வாழ்வதாக சொல்கிறார்கள்.  இந்த கோவில் மாகாளி சக்திபீடமாக கும்பிடுகிறார்கள். ஆனால் சதிதேவியின் எந்தப்பகுதி இங்கு விழுந்தது என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. கொல்கத்தா காளிதேவியின் மறுவடிவமாக இந்த ஹாத்காளிகா மாதா கும்பிடப்படுவதாகவும் ...

இரட்டை வேடம் போடும் திமுக அரசு! முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் பேட்டி

Image
ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மாணவரணியின் சார்பாக ,  திருப்பூர் குமரன் சிலை அருகில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் தங்களது இன்னுயிரை மாய்த்துக் மாய்த்துக்கொண்ட கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்றது.  நிகழ்வில் முன்னாள் அமைச்சர், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழக தேர்தல் பிரிவு செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன், மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தி  சிறப்புரையாற்றினார். முன்னாள் அமைச்சர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்,உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும்,திருப்பூர் ஒன்றிய கழகச் செயலாளருமான கே.என்.விஜயகுமார் ,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ், திருப்பூர் தெ...

10 அமாவாசைக்குள் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை சார்பில் மாவட்டம் முழுவதும் இல்லந்தோறும் மாபெரும் திண்னை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் மற்றும் காந்திநகர் பகுதி கழக செயலாளர் கருணாகரன் ஏற்பாட்டில் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஏபி பகுதியில் திண்னை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் கழகத் தேர்தல் பிரிவு செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பிரச்சரத்தை தொடங்கி வைத்தார். திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள டீ கடையில் மக்களோடு மக்களாக அமர்ந்து டீ அருந்தி திண்னை பிரச்சாரம் செய்தனர். மேலும் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் கடைகளிலும், வாகன ஓட்டிகளுக்கும் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில் :-  சட்டசப...

அடிபொலி...16 ஆண்டுகளுக்கு பிறகு கபாடியில் மாநிலக்கோப்பையை தட்டித்தூக்கிய திருப்பூர் பெண்கள்... ரூ.3.50 லட்சம் அள்ளித்தந்து பாராட்டிய கபாடிக்கழகம்!

Image
சேலத்தில் நடைபெற்ற 71 வது மாநில அளவிலான மூத்தோர் கபடி போட்டிகளில் 38 அணிகள் பங்கேற்ற நிலையில். திருப்பூர் மாவட்ட பெண்கள் அணியினர் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை வென்று அசத்தினார்கள். மேலும் திருப்பூர் மாவட்ட அணியில் இருந்து வீராங்கனைகள் புவனேஸ்வரி, கதிஜா ஆகியோர் தேசிய அளவிலான பெடரேஷன் கோப்பை போட்டிகளில் விளையாடவும் தேர்வாகி உள்ளனர்.  கடந்த 16 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக திருப்பூர் மாவட்ட பெண்கள் அணி முதலிடம் பெற்று உள்ளது. வெற்றி பெற்ற அணியினருக்கான பாராட்டு விழா திருப்பூர் மாவட்ட கபடிக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட கபாடிக் கழக சேர்மன் கொங்கு வி.கே. முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலரும், மாநில பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், துணைச் சேர்மன்எஸ். முருகானந்தம், துணைத் தலைவர்கள்கொ. ராமதாஸ், லைன்ஆர். நாகராஜ்,கே.ஆர்.பி. செல்வராஜ், செய்தித் தொடர்பாளர் சு. சிவபாலன், துணைச் சேர்மன் சன்வின்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு வருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர்ரகுகுமார், மாவட்ட கபாடிக் கழக தலைமைப் புரவலர், துணை மேயர்எம்.கே.எம். பாலசு...

இமயமலையின் தாருகாவனம் - ஜாகேஸ்வர்!

Image
நமது ஆதிகைலாய ஓம்பர்வத யாத்திரையில் நாம் தரிசிக்க இருக்கும் சிறப்பு வாய்ந்த ஒரு புராதன கோவில் தான் ஜாகேஸ்வர். இமயமலையில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் ஜட கங்கா எனும் சிறுநதியின் கரையில் இருக்கிறது ஜாகேஸ்வர் கோவில்கள். ஆதிகைலாயம், ஓம்பர்வதம் தரிசனம் முடித்துவிட்டு வரும்போது, இமயமலை ரோடுகளில் நாம் வருவோம். வழியில் தேவதாரு மரங்கள் ஓங்கி வளர்ந்து நிறைந்து கிடக்கும் தாருகாவனம் இது. தேவதாரு மரங்களில் தொகுப்பாக இருக்கும் இந்தப்பகுதி ‘தேவ்பனி’ என்று சொல்லப்படுகிறது. அதாவது கடவுளின் காடு என்கிறார்கள். இந்த மிகப்பெரிய தேவதாரு வனத்தில் ஹாத் காளிகா என்று சொல்லக்கூடிய மாகாளி கோவிலும், ஜாகேஸ்வர் கோவிலும் இருக்கிறது. ஹாத்காளிகா ஒரு சக்திபீடம். ஜாகேஸ்வர் ஜோதிர்லிங்க கோவில் ஆகும். அதாவது, ததாஸ்து ஜோதிர்லிங்க ஸ்தோத்திரமானது ஜோதிர்லிங்க கோவில்கள் பற்றி சொல்லும் போது, நாகேஷம் என்பது தாருகாவனம் என்று குறிப்பிடுகிறது. குஜராத்தில் உள்ள துவாரகாவில் ஒரு நாகேஸ்வர கோவிலும், மகாராஷ்ட்ராவின் ஹிங்கோலியில் உள்ள அவுந்த் நாகநாத் கோவிலும், உத்தரகாண்டில் அல்மோரா அருகில் உள்ள ஜாகேஸ்வர் எனும் இந்த கோவில் ஆக...