95வது பிறந்தநாளையொட்டி முன்னாள் ஓருங்கிணைந்த நெல்லை மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

 

தூத்துக்குடி முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றிய கழக முன்னோடி சவுந்தரபாண்டியன் 95வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி நயினார்விளை மேற்கு பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சென்று வாழ்த்து தெரிவித்து கௌரவித்தார்.

சௌந்தரபாண்டியன் திமுக தணிக்கை குழு உறுப்பினராகவும், தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவராகவும், பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்படதக்கது. 

நிகழ்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் ரவி இளங்கோ, கவுன்சிலா் மரிய கீதா, மாநகர மாணவரணி அமைப்பாளர் டைகர் வினோத், வட்ட பிரதிநிதிகள் ஏகாம்பரம், இளங்கோ, வட்ட துணைச் செயலாளர்கள் சுந்தர், ராமலட்சுமி, முன்னாள் வட்டச் செயலாளர் கோயில் ராஜ், முன்னாள் கவுன்சிலர் பாலாஜி, திரேஸ்புரம் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெர்சன், பகுதி விவசாய அணி துணை அமைப்பாளர் நடராஜன், பகுதி கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சிற்றரசு, வட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஸ்டின், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா் மற்றும் மணி, அல்பட் மற்றும் குடும்பத்தினா் உடனிருந்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி