சொந்த பயன்பாட்டு வாகன பதிவின்போது ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு வர தேவையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு.!

 

புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது அதை ஆர்டிஓ ஆபிசுக்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. தமிழகத்தில் தினமும் டூ - வீலர்கள், கார்கள், கனரக வாகனங்கள் உட்பட 8,000 வாகனங்கள் ஆர்டிஓவில் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் மட்டுமே 3,000 முதல் 4,000 வரை. அந்த வாகனத்தின் ஓனரோ அல்லது விற்பனை பிரதிநிதியோ, ஆர்டிஓ ஆபீஸ் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின்படி சொந்த பயன்பாட்டு வாகன பதிவின்போது ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு வர தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப் படாமல் இருந்தது. இது தொடர்பாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின் படி இதில் விலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!