தூத்துக்குடி : கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது - ரூபாய் 10,000/- உண்டியல் பணம் மீட்பு.!

 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46) என்பவர் நேற்று (07.12.2025) இரவு கோவிலை பூட்டிசென்று இன்று காலை வந்து திறந்து பார்க்கும்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இசக்கிபாண்டி இன்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார் (19) என்பவர் மேற்படி கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 10,000/- பணத்தையும் மீட்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!