புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு - 110 மையங்களில் 1617 எழுத வாசிக்க தெரியாதவர்கள் எழுதினர்.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று நடைபெற்றது.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழிகாட்டுதலின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி அறிவுரையின்படி நேற்று நடைபெற்றது.

இத்தேர்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் 110 மையங்களில் 1617 எழுத வாசிக்க தெரியாதவர்கள் கற்போர்கள் ஆறு மாதங்கள் தன்னார்வலர்களால் பயிற்சி பெற்று நேற்று தேர்வினை மிகச் சிறப்பாக எழுதினர். 

தூத்துக்குடி நகர்புற வட்டாரத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சாமுவேல் புரம் மற்றும் தஸ்நேவிஸ் மாதா தொடக்கப்பள்ளி இனிக்கோ நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்வு மையத்தினை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம்,மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தனலட்சுமி மேற்பார்வையாளர் பார்வதி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பால்சாமி, கணபதி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆலோசனைப்படி மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்சிநர்கள், மேற்பார்வையாளர்கள், அனைவரும் மையத்தினை பார்வை செய்து தேர்வினை கற்போர்கள் அனைவரும் மிக சிறப்பாக எழுத நடவடிக்கை மேற்கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!