தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம் தெரு, 1ம்கேட், 2ம்கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களாதெரு, பாலவிநாயகர் கோவில் தெரு,
டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதரநகர், சண்முகபுரம் வடக்கு, மேலசண்முகபுரம் முதல் தெரு, ஸ்டேட்பேங்க் காலனி, கந்தாசாமிபுரம், இஞ்ஞாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கார்நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், விவிடி மெயின் ரோடு, முனியசாமிபுரம், சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம். பக்கிள்புரம், லோகியாநகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பர நகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
