தூத்துக்குடியில் டிச. 27, 28-இல் மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு - ஆட்சியர் தகவல்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடியில் கடந்த டிச. 13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டு, வருகிற டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள், தேர்வு நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
