தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் கடந்த 06.11.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் ராஜா (19) மற்றும் பசும்பொன் நகரை சேர்ந்த கண்ணன் மகன் பரமசிவம் (எ) சிவா (19) ஆகிய 2பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (09.12.2025) சிப்காட் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 136பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
