Posts

தூத்துக்குடி விமான நிலையத்தில் 195 கோடியில் புதிய பயணிகள் முனையம் அமைக்கும் பணி : தென் மண்டல நிர்வாக இயக்குநர் துவக்கி வைத்தார்.

Image
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.195 கோடியில் புதிய பயணிகள் முனையம், கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் தென் மண்டல நிர்வாக இயக்குநர் மாதவன் துவக்கி வைத்தார்  வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் 3 விமானங்களும், வாரம் தோறும் பெங்களூருக்கு 3 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 400 முதல் 600 பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநில அரசு சார்பில் 610.25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் விமான நிலைய விரிவாக்க பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி விமான ஓடுதளம் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது 30 மீட்டர் அகலமும், 1349 மீட்டர் நீளமும் கொண்ட விமான ஓடுதளம் உள்ளது. இதனை 45 மீட்டர் அகலமும், 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளமும் கொண்ட ஓடுதளமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பி...

காவல்துறையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி.!

Image
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை (CRPF) காவலர்கள் உயிரிழந்தனர்.  கடல் மட்டத்திலிருந்து பதினாராயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூர்கிறோம் கடற்கரையானாலும், பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளை உன் விடியலுக்கு இன்று நான் மடியத்தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மைவிட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 377. மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிபூண்டு, அவர்களின் வீரத்தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. கடந்த 01.09.2020 முதல் 31.08.2021 வரை வீர மரணமடைந்த காவல்துறையினர் தமிழ்நாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த உதவி ஆய்வாளர் பாலு, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 10 பேர...

மனிதருக்கு பன்றியின் சிறுநீரகம் -கேள்விக்குறியாகும் குரங்கிலிருந்து மனிதன் கோட்பாட்டு ஆய்வு

Image
நியூயார்க்: முதல்முறையாக மனிதருக்கு மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை சோதனை முயற்சியாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளது குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற ஆய்வை கேள்விக்குறியாக்கியுள்ளது. மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இருக்கும் நிலையில், விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்துவது தொடர்பாக தொடர்ந்து சோதனை முயற்சிகள் நடந்து வந்தன. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற கோட்பாடுகளின்படி குரங்கின் இரத்தம், மற்றும் உறுப்புகள் மனிதனுக்கு பொருந்துமா என்று பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் குரங்குங்கும் மனிதனுக்கும் சம்பந்தமே இல்லை என்ற ஆய்வு முடிவுகளே வெளிப்பட்டன. ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் பன்றியின் இரத்தம் மற்றும் பெரும்பாலான உறுப்புகள் மனித இனத்தோடு ஒத்துப் போனது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து மனிதனுக்கு பன்றியின் உறுப்புகள் மற்றும் இரத்தத்தை செலுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்...

கோமா நிலைக்கு சென்ற இரண்டு வயது சிறுவன் - எக்மோ உதவியுடன் காப்பாற்றிய ரேலா மருத்துவமனை.!

Image
உடல் உறுப்பு செயலிழப்பால் கோமாவிற்கு சென்ற இரண்டு வயது சிறுவனை எக்மோ உதவியுடன் காப்பாற்றி ரேலா மருத்துவமனை சாதனை செய்துள்ளது.  கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் அத்விக். சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த குழந்தை நல மருத்துவர் சிறுவனுக்கு கல்லீரல் செயலிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் கோமாவிற்கு சென்று மூச்சு விட முடியாமல் மோசமான சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சிறுவன் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சையில் சிறுவனுக்கு நுரையீரலில் தொற்று இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவனது ஆக்சிஜன் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதனைத் தொடர்ந்து அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், டாக்டர் ரவிக்குமார் மற்றும் டாக்டர் ஆறுமுகம் தலைமையிலான மருத்துவ குழு தீவிர குழந்தை சிகிச்சை நிபுணர் குழுவுடன் இணைந்து உறுப்ப...

பொதுப்பணித்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 68 லட்சம் ரூபாய் மோசடி 3 பேர் கைது.!

Image
தூத்துக்குடியில் பொதுப்பணித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக போலி பணி நியமண ஆணை வழங்கி ரூபாய் 68,00,000/- பணத்தை மோசடி செய்த 3 பேர் கைது - கைது செய்த மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார் தூத்துக்குடியில் சிலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் அவர்களிடம் புகார் அளித்தனர். மேற்படி புகார்களின் அடிப்படையில்  தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மில்லர்புரம், ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த பிச்சைமணி மகன் சக்திவேல் (37), அவரது மனைவி ஜெயசித்ரா (30), தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்த கல்கண்டு மனைவி உஷா (34),  தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த மூக்கையா மகன் முத்துபாண்டி மற்றும் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் கார்த்திக்குமார் ஆகிய 5 பேரும்,  ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் முத்துகுமார் (29) என்பவரிடம் பொது பணித்துறையில் நல்ல வேலையில் இருப்பதாக கூறி அறிமுகமாகி பொதுபணித...

அய்யனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரி காளியப்பன் பதவி ஏற்பு.!*

Image
தமிழகம் முழுவதும் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரி காளியப்பன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.  அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு  உறுப்பினர்கள் 9 பேர் பதவி ஏற்றனர்.இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி மத்திய பகுதி மதிமுக ஒன்றியச் செயலாளர் சரவணன்,மதிமுக முன்னாள் கவுன்சிலர் தெய்வேந்திரன், மற்றும் குருவி குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அனைத்து சமுதாயப் பொது மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் பல்வேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.!

Image
தூத்துக்குடியில் பல்வேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.! தூத்துக்குடி பண்டுகரை பகுதியில் இயற்கை இன்னல்கள் தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்தின் காரணமாக வீடுகள் சேதம் அடைந்த நபர்களுக்கு நிவாரண தொகைக்கான காசோலைகளை  சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி வட்டம் பண்டுகரை பகுதியில் தீ விபத்தின் காரணமாக சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டு குடிசை வீடு சேதம் அடைந்த நபர்களுக்கு நிவாரண உதவி வழங்கிட உத்தரவிடப்பட்டது.  அதன் அடிப்படையில் இன்றைய தினம் குடிசை வீடு முழுவதும் சேதம் அடைந்த நபர்களுக்கு ரூ.5000 நிவாரண தொகையும்இ குடிசை வீடு பகுதி சேதம் அடைந்த நபர்களுக்கு ரூ.4100 என மொத்தம் 7 நபர்களுக்கு ரூ.33200 க்கான நிவாரண உதவித்தொகை அரிசி, பரு...