இன்னும் 52 பேருக்குத் தான் கொரோனா: திருப்பூர் கலெக்டரின் டிரெண்டிங் மெசேஜ்

திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் ’ரெட் ஜோன்’ பகுதியாக உள்ளது. இங்கு இதுவரை 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 



பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் விறுவிறுவென உயர்ந்தது. மாவட்டத்தில் 110 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் திருப்பூர் உள்ளது.



இந்நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வீட்டுக்கு செல்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று முந்தினம் 15 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். நேற்று 18 பேர் குணமடைந்தனர். இன்று மேலும் 13 பேர் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு செல்கின்றனர். 


இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 58 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். தற்போது 52 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.


பத்திரிகைகளுக்கு செய்தி தருவதற்கு முன்பே தனது சமூக வலைத்தள ரசிகர்களுக்கு, தகவல்களை அளித்து எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பவர் நமது திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. 


இன்று மாலை 7 மணி நிலவரப்படி இன்னும் 49 பேர் தான் சிகிச்சை பெற்று வருகிற்ரார்கள்.


 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!