Posts

Showing posts with the label மாவட்ட செய்திகள்

திருப்பூர் பீஷ்மர் மோகன்ஜி விருது: 37 அமைப்புகளுக்கு கலெக்டர் விஜய்கார்த்திகேயன், எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் வழங்கினர்

Image
அமிர்தம் தாய்ப்பால் தானம் குழுவிற்கு விருது வழங்கியபோது    திருப்பூரில் மோகன் கந்தசாமி அறக்கட்டளை சார்பில் சமூக பணியில் சிறந்து விளங்கும் சமூக சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி திருப்பூர் பீஷ்மார் மோகன்ஜி வி ருது வழங்கும் நிகழ்ச்சி ஷெரிப் காலனியில் உள்ள கிட்ஸ் கிளப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.   இந்திராசுந்தரம் அறக்கட்டளைக்கு விருது வழங்கியபோது    இந்நிகழ்ச்சிக்கு அத்வைதா ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். கிட்ஸ் கிளப் கல்விக் குழும தலைவர் மோகன் கே.கார்த்திக் முன்னிலை வகித்தார்.   ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளைக்கு விருது வழங்கியபோது    திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ சு.குணசேகரன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.விஜய்கார்த்திகேயன் அனைவருக்கும் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.   திருப்பூர் வாய்ஸ் ஆசிரியர் ஷியாம் பாபுவிற்கு விருது வழங்கியபோது    வனத்துக்குள் திருப்பூர் குமார்துரைசாமி வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் சமூக பணியில் சிறந...

பழனியில் மரம் விழுந்து வாலிபர் பலியான சம்பவம்: நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Image
பழனியில் நேற்று மரம் விழுந்து இறந்துபோன ஹரிஹரசுதன் அவர்களின், உறவினர்கள் இறந்தவரின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். மேலும் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் .      மரம் விழுந்து இறந்த குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும் மற்றும் பலமுறை மனு கொடுத்தும் மரத்தை அகற்றாத காரணத்தினால் நகராட்சி ஆணையரை கண்டித்து சாலை மறியல் நடைபெறுகிறது.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற அண்ணன் தம்பி மூழ்கி பலி

Image
திருப்பூர் பெரிய கடை வீதியை சேர்ந்தவர் பஷீர். இவர் திருப்பூரில் பிரிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் சபீர் (வயது 11), சபீர் (7) இருவரும் நேற்று மாலை முதல் காணவில்லை. இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பஷீர் புகார் செய்து உள்ளார்.இந்நிலையில் இன்று காலை திருப்பூர் மின் மயானம் அருகில் உள்ள நொய்யல் தடுப்பணையில் சிறுவர்கள் இருவரும் பிணமாக மிதந்து உள்ளனர்.     இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இருவரும் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை 

Image
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஆண்கள் கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல் பணியானது நபார்டு திட்டத்தின் கீழ் மதிப்பீடு ரூபாய் 147.65 லட்சம் மதிப்பீட்டில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் எம்எல்ஏ அவர்களால் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந் நிகழ்வில் முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன்,ஜான் பகுதி கழக செயலாளர் கருணாகரன், வேலம்பாளையம் கூட்டுறவு சொசைட்டி தலைவர் வி கே பி மணி, பரணி பெட்ரோல் பங்க் நடராஜ், முன்னாள் கவுன்சிலர் திலகர் நகர் சுப்பு மற்றும் பள்ளி தலைமையாசிரியை ஆசிரியப் பெருமக்கள் ஆகியோர் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.  

இந்திரசுந்தரம் தொண்டு நிறுவவனம் சார்பில் 50 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் துவக்கம் 

Image
திருப்பூரில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்திரசுந்தரம் தொண்டு நிறுவவனம் சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் சுமார் 50 பெண்குழந்தைகளுக்கு செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்திற்கு அஞ்சலகத்தில் கணக்கு துவங்கி கொடுக்கப்பட்டது.  இது பற்றி இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் இந்திராசுந்தரம் பேசுகையில்:- மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்காக்க கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (sukanya samruddhi yojana). இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும். மாதம் சுமார் ரூ 500 வீதம் 15 வருடங்களுக்கு 90,000 செலுத்தினால் முதிர்வு தொகையாக 1,83,488 கிடைக்கும். இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதம் 250 முதல் அதிகபட்சமாக மாதம் 12,500 வரை செலுத்தலாம். மதம் 12,500 செலுத்தும்போது முதிர்வு தொகையாக 68,37,216 கிடைக்கும். சாமானியரும் இத்திட்டத்தில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு க...

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்

Image
பொதுமக்கள் நலன் கருதி, பொதுமக்களின் குறைகளை உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வுகாணும் வகையில், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்ல நட்புறவு ஏற்படும் வகையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ் இ.கா.ப. உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன்.இ.கா.ப.,  தலைமையில் காவல் துணை ஆணையர், (சட்டம் & ஒழுங்கு) க.சுரேஷ்குமார், மேற்பார்வையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் வலையங்காட்டில் உள்ள சுப்பராயகவுண்டர் திருமண மண்டபத்திலும், மங்கலம் சாலையில் உள்ள பேரடைஸ் ஹாலிலும் நடைபெற்றது.    வலையங்காட்டில் உள்ள சுப்பராயகவுண்டர் திருமண மண்டபத்தில் வடக்கு சரகத்தில் உள்ள வடக்கு காவல் நிலையம், அனுப்பர்பாளையம் காவல் நிலையம், 15 வேலம்பாளையம் காவல் நிலையம், திருமுருகன்பூண்டி காவல் நிலையம், மற்றும் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 80 புகார் மனுக்கள் தொடர்பாக மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும் வந்திருந்தனர். இந்த மனுக்களை வடக்கு சரக உதவி ஆணையர் எஸ்.வெற்றிவேந்தன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர...

பழனியில் நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக ஆர்ப்பாட்டம்

Image
  பழனி மயில் ரவுண்டானா அருகே நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பு சார்பாக உ.பி.யில் ஹத்ராஸ் என்ற இளம்பெண் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை தொடர்ந்து வருகின்றது. எனவே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவில் பெண்களின் வளர்ச்சி தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல் தொடர்ந்து நாள்தோறும்  பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை சற்றும் பொருட்படுத்தாமல் ஆட்சியாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.     மேலும் உ.பி.யில் நடைபெற்ற சம்பவம் அனைத்து மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வரும் நிலையில் உ.பி. முதல்வர் யோகி உடனடியாக பதவி விலக வேண்டும் மத்திய அரசு உடனடியாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய...

மனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு அடுத்த கல்யாணம் செய்த பலே கில்லாடி கைது

Image
  திருப்பத்தூர் மாவட்டம், பெரிய குணிச்சி பகுதியை சேர்ந்த தசரதன் மகன் கோவிந்தராஜ் (29) என்பவருக்கும் ஜோலார்பேட்டை இடையம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் கோமதி (28) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு சீர் வரிசையாக ஒரு பல்சர் பைக், 10 சவரன் நகை அளித்துள்ளனர்.   இரண்டு வருடம் மட்டுமே ஒழுங்காக குடும்பம் நடத்தியுள்ளனர். இருவருக்கும் அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டாக கோமதியிடம் கோவிந்தராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான். நினைத்துக் கொண்டால் அடி அடி என்று அடியை வாங்கியே வாழ்க்கை நடத்தியுள்ளார் கோமதி. ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் கோமதியின் காதில் மீது பலமாக தாக்கியுள்ளார்.   இதனால் கோமதியின் காது ஜவ்வு கிழிந்து காது கேளாமல் போயுள்ளது. அப்போது அம்மா வீட்டிற்கு சென்ற கோமதி ஆறுமாதம் ஆகிய நிலையில் காதிற்கு மெஷின் வைத்து வாழ்ந்து வந்துள்ளார். கோவிந்தராஜ் அம்மா வீட்டுக்கு சென்ற மனைவியைக் கண்டுகொள்ளாமல் மாமியார் வீட்டில் சீதனமாக கொ...

குடியாத்தத்தில் கண்தான ஆர்வலர் கோபிநாத்தின் முயற்சியில் 211-ஆவது கண் தானம்

Image
  வேலூர் மாவட்டம் குடியாத்தம் வயது முதிர்வால் மறைந்த தனது தாயின் கண்களை வேலூர் மாவட்ட எஸ்.பி.யின் நேர்முக உதவியாளர் என்.வெங்கடேசன் வழங்கினார். இது குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவரும் கண்தானப் பிரிவின் மாவட்டத் தலைவருமான எம்.கோபிநாத்தின் முயற்சியில்,  9.10.2020-அன்று பெறப்பட்ட 211ஆவது கண்தானமாகும்.   வேலூர் மாநகராட்சி விருபாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த திருமதி. பேபி அம்மாள் செட்டியார்  (வயது 82), 9.10.2020அன்று இயற்கை எய்தினார். இதையடுத்து, அவரது மகனும் வேலூர் மாவட்ட எஸ்.பி.யின் நேர்முக உதவியாளருமான என்.வெங்கடேசனின்   ஒப்புதலுடன், பேபி  அம்மாளின் கண்கள் தானமாகப் பெற்று  காஞ்சிபுரம்   அகர்வால் கண்மருத்துவமனைக்கு  கண் தானம் செய்யப்பட்டது.   கண் தானம் பெற  உதவியாக ரோட்டரி சங்க பிரமுகர் புரட்சி, திருப்பத்தூரை சேர்ந்த டாக்டர் வினோதினி மற்றும் பலர் உதவிபுரிந்தனர். இதுவரை கோபிநாத் தனது முயற்சியில், 211பேரின் கண்களை தானமாக பெற்று வேலூர் சி.எம்.சி., காஞ்சிபுரம் அகர்வால், மற்றும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு க...

வேப்பூர்அருகே கள்ளச்சாரய வியாபாரி கைது,  120 லிட்டர் சாரயம் பறிமுதல்

Image
  விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகிலுள்ள சித்தேரி பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபரை கைது செய்த போலிசார் அவரிடமிருந்து 120 லிட்டர் சாரயத்தை பறிமுதல் செய்தனர்   கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்காவை சேர்ந்த சித்தேரி ஊராட்சி ஏரி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதாவிற்கு தகவல் கிடைத்தது   அதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் கவிதா,  சிறுபாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலிசார் சித்தேரி ஏரிக்கரை பகுதிக்கு சென்றனர் அங்கு கள்ளாச்சாரயம் விற்றுக்கொண்டிருந்த. அதே கிராமத்தை சேர்ந்த ராயபிள்ளை மகன் மருதமுத்து (வயது 27) என்ற வாலிபரை கைது செய்த போலிசார் அவரிடமிருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கழுதூர் ஓடையில் மழைநீர் நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

Image
  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சி ஓடைபகுதியில் தடுப்பணை ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் கட்டப்பட்டது.   நேற்று திட்டக்குடி பகுதி முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது இதனால் ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.   இதனை அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மாணவர்கள் ஆச்சர்யத்துடன்  கண்டு ரசித்தனர்.   தகவலறிந்து வந்த மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர் சங்கர்,தண்டபாணி,ஊராட்சி மன்றதலைவர்கருணாநிதி ஆகியோர் நேரில் சென்று பார்த்து ரசித்தனர்.   மேலும் தடுப்பணை அமைத்துக்கொடுத்த அரசுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்க்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

வனத்துறையினரின் ஒப்புதலோடு கேரளாவிற்கு கடத்தப்படும் அரியவகை புளியமரங்கள்

Image
உரிய அனுமதி இல்லாமலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரின் ஒப்புதல் இல்லாமலும் போடிமெட்டு மலைச்சாலை வழியாக வனத்துறையினரின் ஒப்புதலோடு  கேரளாவிற்கு கடத்தப்படும் தேனி மாவட்டத்தில்  சாலையோரங்களில் காணப்படும் அரியவகை புளியமரங்கள்.     தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரின் அனுமதி இல்லாமலும் போலியான ஆவணங்களை வைத்துக்கொண்டு போடி மெட்டு வழியாக கேரளாவிற்கு  வனத்துறையினரின் ஒப்புதலோடு  14 டன் எடை கொண்ட புளிய மரங்களை ஏற்றிக்கொண்டு முந்தல் செக் போஸ்டை கடக்க முயன்ற 2 லாரிகளை போடி வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு கனிம வளங்கள் மரங்கள் ஏற்றிச் செல்வதற்கு தடை உள்ள நிலையில் கடந்த சில வருடங்களாக போடி மெட்டு வழியாக வனத்துறையின் ஒப்புதலோடு தமிழகத்தில் அழிந்து வரும்  தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் காணப்படும் அரிய வகை  புளிய மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டப்பட்டு      போடி மெட்டு வழியாக இரவு நேரங்களில் கடத்தப்படுவது ...

வேலூரில் கணவர் இறந்த துக்கத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி  - ஒரு குழந்தை பரிதாப பலி

Image
வேலூரில் கணவர் இறந்த துக்கத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி  - ஒரு குழந்தை பரிதாப பலி - உறவினர்களுக்கு உருக்கமான கடிதம்     வேலூர்மாவட்டம், வேலூர்  தோட்டப் பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்  நரேஷ்குமார். இவருடைய மனைவி கோமதி (வயது 27) , மகன் நித்தில்குமார் (5), மகள் ரியாஸ்ரீ (3) .  கடந்த மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டு நரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார் .இதனால் கோமதி கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டார். இரவு குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டிலிருந்த கொசு மருந்தை மகன், மகளுக்கு கொடுத்தார். பின்னர் அதை அவரும் குடித்தார். மயங்கிக் கிடந்த 3 பேரையும் அவரது குடும்பத்தினர் மீட்டு வேலூர் தனியார்( CMC) ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ரியாஸ்ரீ பரிதாபமாக இறந்தார். கோமதியும் அவரது மகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   கோமதி அவரது உறவினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க என்னால அவர் இல்லாமல் வாழ முடியவில்லை. சின...

தாளவாடி அருகே சூசையபுரம் கல்குவாரி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் அச்சம்

Image
  ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சூசையபுரம் பகுதியானது தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்டது.சூசையபுரம் பகுதியில் செயல்படாத கல் குவாரிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் பதுங்கி உள்ளன. இந்த சிறுத்தைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து ஆடு,மாடு,நாய் போன்ற கால்நடைகளை  கடித்து கொன்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு புஷ்பராஜ் என்பவரது தோட்டத்தில் வீட்டில் வளர்த்து வந்த நாயை கடித்து இழுத்து சென்றது.மேலும் இருதயசாமி என்பவரது தோட்டத்தில் சிறுத்தையின் கால் தடம் பதிந்துள்ளது.இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக அப்பகுதியில் விவசாய நிலங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.            

பழனியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
  பழனி மயில் ரவுண்டானா அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தில் இளம்பெண் மர்ம நபர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு எரித்துக் கொன்ற சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசும் உ.பி.அரசும் எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இறந்த பெண்மணியின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற கட்சி தலைவர்களை காவல் துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராகவும் உ.பி. அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து கண்டன குரல்கள் எழும்பி வருகின்றனர்.   இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பெண்கள் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உ.பி. அரசை அறிவிக்க வேண்டும் இந்நிகழ்வுக்கு பொறுப்பேற்று உ.பி. முதல்வர் யோகி பதவி விலக வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மத்திய அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமையாக சட்டமன்ற தொகுதி ச...

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் தலித், மகளிர், சிறுபான்மையினர் புறக்கணிப்பு... அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி  கண்டனம்

Image
  வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அதிமுக வழிகாட்டுதல் குழுவில் தலித், மகளிர், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது என்று அகில இந்திய ஜனநாயக மக்கள்  கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பொன் குணசீலன் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   ஓடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், நலிந்தோர், ஆதரவற்றோர், மகளிர் நலமும் வளமும் பெற அதிமுகவை மறைந்த முதல்வர் எம்ஜிஆர் உருவாக்கினார். அவரது வழியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் சீரிய முறையில், மேற்கண்டோர் நலம் பெற உறுதுணையாக இருந்தார்.   இருவரும் அதிமுகவிலும், அரசிலும் மேற்கண்ட பிரிவினர்  சலுகைகள் பெற வழிவகை செய்தனர். ஆனால், இப்போது அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த மேற்கண்ட சமூகங்களைச் சேர்ந்தோர் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப் பட்டுள்ளது வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.   தலித், பெண் சமுதாயத்தின் பிரதிநிதியாக சத்தியவாணி முத்து அம்மையாரும் பெருமளவு உயர் பதவியை எம்ஜிஆர் வழங்கினார். இதையடுத்து,  டாக்டர் வேணுகோபால், தலித் எழில்மலை,  கருப்பசாம...

ஈரோடு மாவட்ட கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் 

Image
ஈரோடு மாவட்டம் கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆலோசனை கூட்டம்  எழுமாத்தூரில் சி. ஐ. டி. யு. சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர் வரும்19.10.2020 திங்கள் கிழமை அன்று ஈரோடு  மாவட்ட கூட்டுறவுஇணை பதிவாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் CITU  ஈரோடு மாவட்ட தலைவர் சுப்பிரமணி, சி. ஐ. டி. யு.  கூட்டுறவு தொழிற்சங்க தலைவர் ரவி, மற்றும் நியாய விலை கடை விற்பனையாளர் C. விசுவநாதன் மற்றும்  கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்களும் கலந்து கொண்டனர்

பழனியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இணையும் விழா

Image
பழனியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இணையும் விழா நடைபெற்றது.     பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பல்வேறு கட்சியில் இருந்து விலகி  தொண்டர்கள் இணையும் விழா நடைபெற்றது. ஆயக்குடி பகுதிகளில் பல்வேறு கட்சிகளில் இணைந்து செயலாற்றிக் கொண்டு வந்துள்ள கட்சித் தொண்டர்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அதிருப்தி அடைந்ததால் அனைவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைவதாக முடிவெடுத்துள்ளனர்.   இந்நிலையில் ஆயக்குடி பேரூர் செயலாளர் சிவக்குமார் மற்றும் சர்குணம், சக்திகுமார், ஏற்பாட்டின் பேரில் மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி மற்றும் ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இவர்களை மாவட்ட செயலாளர் நல்லசாமி வரவேற்று கட்சியின் சாதனைகளைப் பற்றியும் கட்சியின் செயல்பாடுகள் பற்றியும் பல்வேறு கருத்துக்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.     மேலும் ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார் புதிதாக இணைந்த கட்சி தொண்டர...

வடிகால் வாய்க்கால் இல்லாமல் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் நாசம்

Image
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் செளந்திரசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட செம்பேரி கிராமத்தில் நேற்று இரவு பெய்த கன மழையால் மழை நீர் தேங்கி நின்றது இதனால்  நெல் பயிர் நடும் விவசாயிகள் பெரும் அவதியடைந்தனர். வடிகால் வாய்க்கால் இல்லாமல் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் நாசம் ஆனதால் விவசாயிகள் போராட்டத்திற்கு தயாரானார்கள்.   தகவலறிந்து வந்த பெண்ணாடம் காவல்துறை ஆய்வாளர் மற்றும் தனிப் பிரிவு எஸ்பி சிஐடி செல்வகுமார் மற்றும் கிராமநிர்வாக அலுவலர்வருவாய் அலுவலர்ஊராட்சி மன்ற தலைவர் நடேசன்ஊராட்சி மன்ற துணைத்தலைவர் துர்க்காதேவி ஆறுமுகம்நல்லூர் சேர்மன் செல்வி ஆடியபதம்ஆகியோர் வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓரு வாரத்திற்குள் வடிகால் வாய்க்கால் அமைத்து தருவதாக உறுதியளித்தனர் இதனை ஏற்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் 900 சலூன் கடைகள் மூடல் - கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

Image
  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த குறுவம்பட்டி கிராமத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது உரிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   வேலூர் மாவட்ட மருத்துவர் நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சலூன் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று வேலூர் மாவட்டத்தில் சலூன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகளுக்கு சென்ற வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.   இந்தசங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எம்.கணபதி, செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, அமைப்பாளர் சரவணன், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் விஜி மற்றும் நிர்வாகிகள் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கோரியும், சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். ...