திருப்பூர் பீஷ்மர் மோகன்ஜி விருது: 37 அமைப்புகளுக்கு கலெக்டர் விஜய்கார்த்திகேயன், எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் வழங்கினர்



அமிர்தம் தாய்ப்பால் தானம் குழுவிற்கு விருது வழங்கியபோது 

 

திருப்பூரில் மோகன் கந்தசாமி அறக்கட்டளை சார்பில் சமூக பணியில் சிறந்து விளங்கும் சமூக சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி திருப்பூர் பீஷ்மார் மோகன்ஜி விருது வழங்கும் நிகழ்ச்சி ஷெரிப் காலனியில் உள்ள கிட்ஸ் கிளப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

 


இந்திராசுந்தரம் அறக்கட்டளைக்கு விருது வழங்கியபோது 

 

இந்நிகழ்ச்சிக்கு அத்வைதா ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். கிட்ஸ் கிளப் கல்விக் குழும தலைவர் மோகன் கே.கார்த்திக் முன்னிலை வகித்தார்.

 


ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளைக்கு விருது வழங்கியபோது 

 

திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ சு.குணசேகரன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.விஜய்கார்த்திகேயன் அனைவருக்கும் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

 


திருப்பூர் வாய்ஸ் ஆசிரியர் ஷியாம் பாபுவிற்கு விருது வழங்கியபோது 

 

வனத்துக்குள் திருப்பூர் குமார்துரைசாமி வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் சமூக பணியில் சிறந்து விளங்கிய சமூக சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் 32 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

 


துளிர் அறக்கட்டளைக்கு விருது வழங்கியபோது 

 

பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 


இணைந்த கரங்கள் அறக்கட்டளைக்கு விருது வழங்கியபோது 

 

இந்நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். சமூக இடைவெளி கடைபிடித்து நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

 


 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!