திருப்பூரில் ரூ.29 லட்சம் மதிப்பில் சாலை பணிகளை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ கே.என்.விஜயகுமார் துவக்கிவைத்தார்


திருப்பூர் வடக்கு தொகுதி, திருப்பூர் ஒன்றியத்துக்குட்ப்பட்ட பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நகர் பகுதியில் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி  ரூ.3.50 லட்சம் மதிப்பிலான  பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள், ரூ.26.33 லட்சம் மதிப்பில் மாரப்பன்பாளையம் புதூர் முதல் ஊர் எல்லை வரை ஓரடுக்கு ககப்பி மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை  திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ  அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.



உடன் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, துணை சேர்மன் தேவிஸ்ரீ நந்தகுமார், யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்யா மகராஜ், பாசறை செயலாளர் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பொங்குபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா வடிவேல்,



ஒன்றிய உதவி பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ,பொங்குபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கருப்புசாமி, நிர்வாகிகள் வேலுசாமி, துரைசாமி, லோகநாதன், பரமசிவம், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஜெயகுமார், வார்டு உறுப்பினர்கள்  மயில்சாமி உட்பட பல நிர்வாகிகளும் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!