கொரோனா காலத்தில் அயராத பணி: கோபி போலீசாருக்கு பாராட்டு

ஈரோடு மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் பொருட்டு, ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிவப்பு மண்டலமாக இருந்த ஈரோடு மாவட்டத்தை பச்சை மண்டலமாக மாற்ற கடந்த இரண்டு மாதங்களாக காவலர்கள் 24 மணி நேரமும் ஓய்வின்றி, உறக்கமின்றி, கடுமையாகவும், திறமையாகவும் பணியாற்றியுள்ளனர்.



இச்சிறப்பான பணியினை பாராட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க   பள்ளி கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் ,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன், போலீஸ் எஸ்.பி., சக்தி கணேசன் ஆகியோர் கோபி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரப்படுத்தினார்கள். இது ஈரோடு மாவட்ட காவல் துறையின் சிறந்த பணிக்கு மேலும் ஒரு மைல்கல்லாக இந்நிகழ்வு அமையப்பட்டது என ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி