4,526 பேருக்கு கொரோனா...67 பேர் பலி...சென்னையில் குறையுது...மற்ற மாவட்டங்களில் உயருது...

தமிழ்நாட்டில் கொரோனா நோய்ப்பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. தினமும் 2000 பேருக்கு பாதிப்பு என்ற நிலையை தொட்ட சென்னையில் நோய்ப்பரவல் சற்று குறைந்து உள்ளது. 


அதற்கு பதிலாக சென்னை அல்லாத மாவட்டங்களில் கொரோனா தொற்றுப்பரவல் தீவிரம் அடைந்துள்ளது. 


தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும், 1078 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 


சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களில் மட்டும் 3,448 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுள்ளது.


சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 450 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.



 


இன்று 67 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 


4,743 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.


தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தமாக 1,47,324 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. இதில் இன்று 4,743 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  97,310 பேர் குணமடைந்து உள்ளனர். 


இன்னும் 47,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


 


 


 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!