பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முழுவதுமாக கொள்முதல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் கொண்டு வரும்  பாலை முழுவதும் கொள்முதல் செய்யாமல்  திருப்பி அனுப்பும் நடவடிக்கையை கண்டித்தும், விவசாயிகள் கொண்டு வரும் பாலை முழுவதுமாக கொள்முதல் செய்ய கோரி   சேடர்பாளையம் பால் கூட்டுறவு  சங்கத்தின் முன்பாக சங்க துணைத் தலைவர் எஸ்.கே.பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். திரளான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி