சட்டமன்ற உறுப்பினர் காரை சேதப்படுத்திய வழக்கு இருவர் கைது


 

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி நேரத்தில் இருவரை விரைந்து கைது செய்து விசாரணை மேற்கொணடு வருகின்றனர். 

     

மெய்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டுபத்துப் பகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


 

இது குறித்து சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெய்குமார் நேரில் சென்று பார்வையிட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டு பிடித்து விரைவில் கைது செய்ய தனிப்படைகள் அமைத்தார்.

 

மேற்படி தனிப்படையினர் 6 மணி நேரத்தில் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஜின்னா (27) என்பவரையும்,

 

தண்டபத்து கணேசன் மகன் செல்வநாதன் (41) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!