Posts

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களிடம் ரூ.36 கோடி மோசடி - தொண்டு நிறுவன இயக்குநர் கைது!!

Image
 அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களிடம் ரூ.36 கோடி மோசடி -  தொண்டு நிறுவன இயக்குநர் கைது!! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.36 கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முப்பிலிவெட்டி பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமி (33) என்பவரிடம் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன் (46) மற்றும் சிலர் தாங்கள் நடத்தி வரும் ஆதவா தொண்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால் நல்ல சம்பளத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாகவும்,  நீங்கள் தரும் பணத்திற்கு லைஃப் இன்சூரன்ஸ் காப்பீடு, 15 வருட முடிவில் முதிர்வு தொகையுடன் சேர்த்து திருப்பி தந்து விடுவதாகவும், வேலையை விட்டு நின்றால் மேற்படி டெபாசிட் தொகையை திருப்பி தரப்படும் என்றும், 58 வயது வரை அரசு பள்ளிகளில் வேலை செய்யலாம் என்றும் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறியதன் பேரில் மேற்படி சண்முகலட்சுமி ரூப...

கோவை ஓ பை தமாராவின் உணவகமான ஓ கஃபே-வில் ஈஸ்டர் சிறப்பு மதிய விருந்து

Image
கோவை ஓ பை தமாராவின் உணவகமான ஓ கஃபே-வில்  ஈஸ்டர் சிறப்பு மதிய விருந்து! கோயம்புத்தூர் 25, மார்ச் 2024: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியான ஓ பை தமாராவின் உணவகமான ஓ கஃபே-வில் வரும் ஞாயிறு (மார்ச் 31) மதியம் 12.30 முதல் 3 மணிவரை ஈஸ்டர்  சிறப்பு மதிய விருந்து நடைபெறவுள்ளது. உள்ளூர் வகை உணவான அப்பம் முதல் உலகின் பல பகுதிகளில் மக்கள் விரும்பும் உணவு வகைகள் பலவும், வெவ்வேறு வகை சாலட்,  இனிப்புகள் இந்த விருந்தில் இடம்பெறும். மேலும் வாடிக்கையாளர்கள் முன்னர் நேரடியாகவே பல உணவுகள் சமைத்து தரும் கவுன்டர்களும்  இதில் இடம்பெறும். குழந்தைகள் ஈஸ்டர் காலத்தில் விளையாடும் 'புதையல் தேடும் போட்டி' விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க பெரியவர்களுக்கு தலா ரூ. 1599++ மற்றும் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ. 899++ கட்டணமாகும். இந்த கட்டணத்திற்கு விருந்துடன் தேநீர் மற்றும் காபி உள்ளடங்கும். விருந்தில் உள்ளடங்கும் வேறு எந்த  உணவை ஆர்டர் செய்தாலும் அதற்கு கட்டணம் உண்டு.

கோவை நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Image
கோவை  நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம்  மின்னணு தொழில்நுட்பங்களில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் - மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சிகளை பெற பயனுள்ளதாக இந்த நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்களுக்கு வழி வகுக்கும் என அரசு தொடர்புகள் துறையினுடைய தலைவர் உதயசங்கர் தெரிவிப்பு. கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கிருஷ்ணா கல்வி நிறுவனங்களுக்கும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்  கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அனைத்து மாணவர்களும் - மிகச் சிறந்த மின்னணு தொழில்நுட்பங்களில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், நாஸ்காம் அளிக்கும் திறன் மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சிகளை பெறவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பாக திருமதி எஸ்.மலர்விழி மற்றும் நாஸ்டீம் அமைப்பின் கல்வி மற்றும் அரசு தொடர்புகள் துறையினுடைய தலைவர் உதயசங்கர் அவர்களும் புர...

*கோபி சட்டமன்றத் தொகுதி நம்பியூர் ஒன்றியம் எலத்தூர் பேரூராட்சியில் வசித்து வருபவர் யுவராஜ் நாடார். விவசாய தொழில் செய்து வரும் இவர் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளராகபோட்டியிடுகிறார். *

Image
  கோபி சட்டமன்றத் தொகுதி நம்பியூர் ஒன்றியம் எலத்தூர் பேரூராட்சியில் வசித்து வருபவர் யுவராஜ் நாடார். விவசாய தொழில் செய்து வரும் இவர் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். சிறுவயதிலிருந்தே முழு நேர விவசாயியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் சமூக அக்கறையில் ஆர்வம் இருந்ததால் இந்த தேர்தலில் சுயேட்ச்சியாக நின்று போட்டியிடுகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுத்தால் முற்போக்கு சிந்தனையுடன் சமூகத்திற்கு நான் பாடுபடுவேன் எனவும் மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க அரசின் உதவியோடு பாடுபடுவேன் எனவும், குறிப்பாக அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்று தர முனைந்து செயல்படுவதாகவும் மேலும் தென்னை மற்றும் பனை விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுவதாகவும் கூறினார். இந்தத் தேர்தலில் மக்களுடன் எனது கூட்டணி அமைத்து மகத்தான வெற்றியை பெற்று பெருந்தலைவர் காமராஜரின் நேர்கொண்ட பாதையிலும், கேப்டன் விஜயகாந்தின் நல்வழி பாதையைய...

சர்வதேச யோகா போட்டியில் இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி சாதனை

Image
சர்வதேச யோகா போட்டியில் இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி சாதனை சென்னையில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டிக்கான தேர்வு போட்டியில், இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும்,ஜெ.கு. ஜெயவர்தனி  ஒட்டு மொத்த சேம்பியன் மற்றும் , கல்ச்சுரல் பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தல் சென்னை வேலம்மாள். இண்டர் நேஷனல் பள்ளியில்  (IYYF & SYYF) இணைந்து  இண்டோ-ஸ்ரீலங்கா யோகா  சேம்பியன்ஷிப் நடைபெற்றது..ஜூனியர்,சீனியர்,மற்றும் ஓபன் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த யோகா போட்டியில் போட்டியில் கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, பாண்டிச்சேரி என  பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  மாணவ,மாணவிகள்  கலந்து கொண்டனர்.இதில், இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும், ஸ்ரீவில்லிபுத்தூர். கம்மாப்பட்டியைச் சேர்ந்த மாணவி ஜெ.கு. ஜெயவர்தனி  ஒட்டு மொத்த சேம்பியன் பிரிவிலும், கல்ச்சுரல் பிரிவிலும் முதலிடம் பெற்று கோப்பையை தட்டி சென்றார்...இந்நிலையில்  சென்னையில் ந...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்த அமலாக்கத் துறையை கண்டித்தும், ஜனநாயக படுகொலை செய்த பாஜகவை கண்டித்தும் கோவை மண்டலம் சார்பாக கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பாக கோவை மண்டல வி.சி.க தலைவர் சுசி கலையரசன், தமிழ் புலிகள் கட்சி மேற்கு மண்டல செயலாளர் .கோவை குமார், திராவிடர் கழக தலைவர் .ராமகிருஷ்ணன், சமூக விழிப்புணர்வு இயக்க தலைவர் வழக்கறிஞர் J.D.சாக்ரடீஸ், கிறிஸ்துவ ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் .ஸ்டீபன் ராஜ் மற்றும் .டிசில்வா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆம் ஆத்மி கட்சி கோவை மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் சார்லஸ் ஆண்டனி, பொள்ளாச்சி சட்டமன்ற பொறுப்பாளர் ஸ்ரீமனோஜ் குமார், கோவை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ரமேஷ் மந்திரி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற பொறுப்பாளர் சாந்து முகமது, கவுண்டம்பாளையம் சட்டமன்ற பொறுப்பாளர் சண்முகசுந்தரம், கோவை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் லோகேஷ், குனி...

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பாக நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

Image
தமுமுக சார்பாக நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை மத்திய மாவட்டத்தின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி  குனியமுத்தூர் அருகே புட்டுவிக்கி சாலையில் அமைந்துஉள்ள NSK திருமண மண்டபத்தில் நடைபெற்றது  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் சர்புதீன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது  இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் ஹாஜ்  கமிட்டி மாநில தலைவரும் ப.அப்துல் சமது  அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்  இந்தியா கூட்டணி சார்பில் கோவையில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சியில் போட்டியிடும்  வேட்பாளர் ஈஸ்வர சாமி   இருவர்களும் கலந்து கொண்டார்கள்  இதில் தமுமுக மாநில பொருளாளர் உமர் அவர்கள், மாநில பிரதிநிதி சுல்தான் அமீர் , அக்பர், சாதிக் அலி, கோவை சையது, தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப்பு ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராகிம், தமுமுக மாவட்ட பொருளாளர் சிராஜுதீன், திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக், திமுக மாவட்ட செயல...