Posts

எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வு... 250 டிப்பர் லாரிகள் வேலை நிறுத்தம்!

Image
திருப்பூரில் எம் சாண்ட்,   யூனிட் ஆயிரம் ரூபாய் உயர்த்தியதை கண்டித்தும், உடனடியாக விலையேற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தியும்  திருப்பூர் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை, நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் எனவும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயக்கபடாது என ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத் செயலாளர் மூர்த்தி பேட்டி அளித்தார். திருப்பூர் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் சங்கத்தின் செயலாளர் மூர்த்தி  தலைமையில் நடைபெற்றது. இதில் கட்டுமான பணிக்கு மிகவும் தேவையான மணல் குவாரிகள் இயங்காத சூழ்நிலையை பயன்படுத்தி செயற்கை மணல் தயாரிக்கும் எம் சாண்ட் கிரஷர்கள் கடுமையான விலை உயர்வை திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதாக ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத் செயலாளர் மூர்த்தி தெரிவித்தார்.  மேலு...

திருப்பூர் பாரத் மைக்ரோ லேப்ஸ்-ன் மாபெரும் ஆரோக்கிய மேளா... சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள்!

Image
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாரத் மைக்ரோ லேப்ஸ் சார்பில் மாபெரும் ஆரோக்கிய மேளா எனும் குறைந்த கட்டணத்தில் பல்வேறு இரத்த பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்ளும் வகையில் முகாம் நடத்தி வருகிறது. கடந்த நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினத்தன்று துவங்கிய சிறப்பு பரிசிதனை முகாம் டிசம்பர் 15ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து பாரத் மைக்ரோ லேப்ஸ் மற்றும் பாரத் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குநர் அருண் பாரத் கூறுகையில்: எங்களது பாரத் ஏஜென்சீஸ் குழுமத்தின் சார்பில் பாரத் மைக்ரோ லேப்ஸ் எனும் அதிநவீன பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த கருவிகள் மூலம் அனைவருக்கும் இரத்தப்பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மக்களுக்கு சேவை அடிப்படையில் இரத்தப்பரிசோதனை சிறப்பு முகாமினை, கடந்த நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினத்தன்று துவக்கி எதிர்வரும் டிசம்பர் 15ம் தேதி வரை நடத்தி வருகிறோம். திருப்பூர் பகுதிகளில் வேறு யாரும் தர இயலாத வகையில் இரண்டு பேக்கேஜ்கள் அறிமுகம் செய்துள்ளோம். முதல் பேக்கேஜ் (69 வகையான பரிசோதனைகளுடன்) ரூபாய் 499க்கு தரப்படுகிறது. இதில், சர்க்கரை அளவு (FBS)...

வரி உயர்வுகளை கண்டித்து திருப்பூரில் அதிமுகவினர் உண்ணாவிரதம்.... 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Image
திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் மற்றும் கழிவு வரி உயர்வு, ஆண்டுதோறும் ஆறு சதவீதம் சொத்து வரி உயர்வு, தொழில் வரி உயர்வு, வணிக நிறுவனங்களிடம் வசூலிக்கும் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு, வரிகளுக்கு அபராதம் போன்றவற்றை திரும்ப பெறுவதற்கும், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும்  திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.  திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்துக்கு, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் வரவேற்புரையாற்றினார்.. இந்த போராட்டத்தை முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் துவக்கி வைத்தார். திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை.கே. ராதாகிருஷ்ணன்,எம்.எஸ்.எம்.ஆனந் தன் ஆகியோர் கலந்து ...

திருப்பூர்: கேங்வார் நடுரோட்டில் ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு.

Image
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் திருப்பூர் கோல்டன் நகரில் தங்கி வருகிறார். இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருடன் சேர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட நண்பர்களுக்கிடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு இரண்டு தரப்பாக பிரிந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் மற்றொரு தரப்பினர்   இன்று சமாதானம் பேசுவது போல் ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதிக்கு ராஜேஷை அழைத்து வந்து  நடுரோட்டில் வைத்து ராஜேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு ரெட் டாக்சியில் தப்பிச் சென்றனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீஸார் உயிருக்கு போராடி வந்த ரமேஷை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். சிசிடிவி காட்சிகள் மூலம் 5 பேர் சேர்ந்து ராஜேஷை தாக்குவது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பிச் சென்ற நபர்களை தீவிரமாக தேடி வர...

வங்கதேச ஹிந்துக்களின் உரிமைகளை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம்...இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு

Image
 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்பாடு உள்ளது, வங்கதேசத்தில் ஹிந்துக்களின் உரிமைகளை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.  வங்கதேசத்தில் ஹிந்துக்களின் உரிமைகளை மீட்கக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் வரும் புதன்கிழமை (டிசம்பர் 4) ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்த வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், ஆர்எஸ்எஸ் கோட்டத் தலைவர் ஆர்ம்ஸ்டிராங் பழனிசாமி ஆகியோர் கூறியதாவது: இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது பாகிஸ்தானில் போராட்டம் காரணமாக, அந்த நாட்டைப் பிரித்து வங்கதேசம் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அந்த நாட்டின் பிரதமராக ஷேக்ஹசீனா இருந்தபோது நமது நாட்டுடன் நல்ல உறவாக இருந்தார்கள். அங்குள்ள பயங்கரவாதிகள் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி அவரை நாட்டை விட்டு வெளியேற்...

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், அறிவொளி சுடர்கள் செயற்குழு கூட்டம்..

Image
கோவை அறிவொளி இயக்க, முன்னாள் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கு பெரும் அறிவொளி சுடர்கள் செயற்குழு மற்றும் கோட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம், பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் உடுமலை சிவராஜ்  தலைமை தாங்கினார் முன்னதாக,அமைப்பின் பொருளாளர் முனைவர் ஐ. மோகன்தாஸ் வரவேற்புரையாற்றினார். செயலர் குவளை மணியன் செயல்பாடுகள் எதிர்வரும் புத்தக வெளியீடு, செயற்குழு கூட்ட நோக்கம் குறித்து பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அறிவொளி தங்க புத்தக வெளியீடு , நிதி மற்றும் தகவல் திரட்டுதல் குறித்த தங்களின் ஆலோசனை முன்வைத்தனர். கூட்டத்தில், அறிவொளி  தங்கப் புத்த கம், பிப்ரவரி -2025 இல்-அச்சடிப்பது, புத்தகத்தை. அறிவொளி தலைவர் ச.வி.சங்கர் இ.ஆ.ப. (ஓய்வு) அவர்களால் வெளியீடு செய்வது எனவும், புத்தக வெளியீடு, அதில் இடம்பெறும் கருத்துக்களை ஆலோசிக்க 9 நபர்கள் கொண்ட குழு தேர்ந்தெடுத்தல் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புத்தக அச்சு செலவினை மேற்கொள்ள, நிதியுதவி அளிக்க உள்ளவர்கள் விபரத்தினை முனைவர் மோகன்தாஸ் எடுத்து உரைத்தார். கூட்டத்தில் அறிவொளி சுடர்கள் செயற்குழு ...

நிலச்சரிவில் இருந்து 5 பேரின் உடல்கள் மீட்பு... அதிர்ச்சியில் மீளாத திருவண்ணாமலை மக்கள்!

Image
 ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டை ஒரு உலுக்கு உலுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கடலிலேயே நின்று ஆட்டம் காட்டியது. நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, புதுச்சேரியில் கடந்த வாரமே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அங்கு பெரும் மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய சேதம் எதையும் ஏற்படுத்தாததால் மக்கள் தப்பித்தனர்.  தொடர்ச்சியாக சென்னைப்பக்கம் கடந்த 2 நாட்களாக பெருமழை வந்த நிலையில், சென்னைவாசிகள் வழக்கமான மழைக்கால பாதிப்புகளுக்கு ஆளானார்கள். ஆனால் சென்னை தவிர்த்த வடதமிழ்நாட்டு மக்களுக்கு கடந்த 2 நாட்கள் பெரும் அதிர்ச்சியை தருவதாகவும், சோகமானதாகவும் மாற்றி விட்டது இந்த ஃபெஞ்சல் புயல். சனிக்கிழமை காலை திருவண்ணாமலையில் ஆரம்பித்த தொடர்மழை, ஊரையே அல்லோலப்படுத்தியது. இந்த மழைக்கு பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களும், புதுச்சேரியும் தப்பவில்லை. வழக்கத்துக்கும் மாறாக எங்கும் வெள்ளக்காடாக இருந்தது. ஆனால் திருவண்ணாமலை மக்களுக்குத்தான் ஃபெஞ்சல் புயல் பெரும் அதிர்ச்சியை தந்து உள்ளது. ஞாயிறன்று திருவண்ணாமலையில் 16 செண்டி மீட்டர் வரை பெய்த பேய் மழை...