Posts

தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு.!

Image
  தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த வடகிழக்கு தொடர் மழையால் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்குவதாக தூத்துக்குடி மாநகரம் திரேஸ்புரம் பகுதிக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொது மக்களிடம் இருந்து தகவல் வந்ததையடுத்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை தூர்வார உடனடியாக ஏற்பாடு செய்ததுடன், அதிக திறன் கொண்ட மின் மோட்டார்களை ஏற்பாடு செய்து வரவழைத்து தேங்கிய வெள்ள நீர் வெளியேறுவதற்கு வழிவகை செய்து கொடுத்தார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் எமல்டன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், மார்ஷல், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

1,500 க்கும் மேற்பட்டோருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு - தேங்கிய மழை நீரில் வெறும் காலுடன் நடக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!

Image
  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது எலி காய்ச்சல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேங்கிய மழை நீரில் வெறும் காலுடன் நடக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுழல் வடிவ நுண்ணுயிரியான 'லெப்டோஸ்பைரா' பாக்டீரியாவால் எலி காய்ச்சல் ஏற்படுகிறது. முதலில் விலங்குகளுக்கு பரவுகின்ற எலி காய்ச்சல், அதன் பிறகே மனிதர்களுக்கு பரவுகிறது. இது நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவிலும் எலி காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை உட்பட 10 இடங்களில் எலி காய்ச்சல் நோயைக் கண்டறிய மத்திய அரசால் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலை...

ஆந்திராவில் ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் வாலிபர் பலி

Image
ஹைதராபாத் - பெங்களூரு ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில், திருப்பூரை சேர்ந்த வெங்காய வியாபாரியின் மகன் பலியானார். தெலுங்கானா தலைநகர் ைஹதராபாத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை, கர்நாடகாவின், பெங்களூருவுக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டுச்சென்றது. நேற்றுமுன்தினம் அதிகாலை, ஆந்திர மாநிலம், கர்னுால் அருகே, பைக் மீது மோதிய பஸ், தீப்பிடித்து எரிந்தது. இதில் திருப்பூரை சேர்ந்த வெங்காய வியாபாரியின் மகன் உயிரிழந்துள்ளார். பூலுவப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் (ராஜா-63) தள்ளுவண்டியில் வெங்காயம் வியாபாரம் செய்து வருகிறார். மனைவி சாந்தி. இவர்களுக்கு, இரண்டு மகன்கள். இளைய மகன் யுவன் சங்கர் ராஜா, 22 ஹைதராபாத்தில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார்.  தீபாவளிக்கு விடுமுறை கிடைக்காத நிலையில், பண்டிகை முடிந்தபின் விடுமுறை எடுத்துக்கொண்டு, பெற்றோரை பார்ப்பதற்கு, நேற்று முன்தினம் திருப்பூருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில், தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்சில் பயணித்த யுவன் சங்கர்ராஜ் பலியாகியுள்ளார்.

திருப்பூரில் வாலிபர் கொலையில் வட மாநில இளைஞர் கைது... கொலையில் சந்தேகம் தெரிவித்து உறவினர்கள் போராட்டம்.

Image
திருப்பூரில் வாலிபர் கொலையில் வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலையில் சந்தேகம் தெரிவித்து உறவினர்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள மசூதிக்கு பின்புறம் உள்ள நிட்டிங் கம்பெனியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கம்பெனி கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது,  அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைககு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து அழுகிய நிலையில் கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.  தனியார் நிட்டிங் கம்பெனி குரு சங்கர் என்பவருக்கு சொந்தமானது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது மேலும் குரு சங்கரின் நண்பர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் அடிக்கடி அங்கு வந்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 19ம் தேதி குரு சங்கர் ஊருக்கு சென்றிருந்த நிலையில், கம்பெனிக்கு வந்த காமராஜ் அங்கு பண...

திருப்பூர் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாமன்ற கூட்டம்...குடிநீர் விநியோகம் தாமதம் என அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு.

Image
 திருப்பூர் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாமன்ற கூட்டம்...குடிநீர் விநியோகம் தாமதம் என அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு. திருப்பூர் மாநகரின் குப்பைக்கு தீர்வு காணும் விதமாக அவசர மாமன்ற கூட்டம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் அமித்,  துணை மேயர்  பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து தரப்பினரும் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மேயர் தினேஷ்குமார் பேசினார்.  இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குப்பையை தரம் பிரித்து எடுப்பதில்லை என்றும், அவ்வப்போது குப்பை வாகனங்கள் பழுதாகி சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை இயங்கப்படாமல் இருப்பதாகவும், இதனால் குப்பை அழுவதில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதேபோன்று பல்வேறு பகுதிகளில் 12 நாட்களுக்கு ஒரு முற...

கன்னியாகுமரி : ஒரு லட்சத்து 15 ஆயிரம் லஞ்சம் - காவல் ஆய்வாளர் கைது.!

Image
  கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்திலேயே பல்வேறு காவல் நிலையங்களிலும் பணிபுரிந்து வருகிறார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கொள்ளையன் ஒருவன் கொள்ளையடித்த 38 பவுன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்ததாக இவர் மீது வழக்கு  நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே இவரது வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது அப்போது அவரது வீட்டில் மேற்படி திருட்டு நகைகள் இருந்ததும் அம்பலமானது. அது தொடர்பான வழக்கும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் நிலுவையில் உள்ளது. தற்சமயம் இவர் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராஜன் என்ற  சந்தை ராஜன் என்பவர் தன்னை ஒரு வழக்கில் பொய்யாக  ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சேர்த்து உள்ளதாகவும் அதில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும் தான் அந்த சம்பவத்தில் இல்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ராஜன் என்ற சந்தை ராஜன் புகார் கொடுத்திருந்தார்...

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் 29ம் தேதி சிறப்பு கூட்டம் - மேயர் தகவல்!

Image
  தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வருகிற 29ஆம் தேதி வார்டு வாரியாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து மக்களும் பங்கேற்கும் விதமாக சிறப்பு கூட்டங்களை நடத்திட கூறியுள்ளார். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இப்போது பொதுமக்களுக்கு கிடைத்திடும் அடிப்படை தேவைகளான குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு ஆகியவை குறித்து வருகின்ற 29.10.2025 அன்று கீழ்க்காணும் இடங்களில் வார்டு வாரியாக நடைபெற உள்ளது. ஆகவே மாமன்ற உறுப்பினர்கள் கீழ் காணும் இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் தங்கள் பகுதியினை சேர்ந்த பொதுமக்களை கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்