முத்துநகர் கடற்கரையில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரிப்பு.!
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிாி உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்களிடம் வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், வட்டச்செயலாளர் மரிய ஆன்ஸ், கவுன்சிலா் எடின்டா, காங்கிரஸ் வட்டத்தலைவர் மோகன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.