மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு.!

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் தேதி,  தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி  மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் சாருஶ்ரீ முன்னிலையில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் தனசிங், காந்திமதி, சேகர்,  மற்றும் கவுன்சிலர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்