Posts

Showing posts from January, 2023

கோவை, தேனி கலெக்டர்கள் உள்பட 30 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்!

Image
 தமிழக முழுவதும் 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டிருக்கிறது.  இதில் திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த கிராந்தி குமார் பாடி கோவை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கடலூர் ரூரல் டெவலப்மென்ட் உதவி கலெகடராக பணியாற்றி வந்த பவன்குமார் கிரியப்பவாணர் நியமிக்கப்படுகிறார்.  சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக பணியாற்றி வந்த ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  தமிழ்நாடு மருத்துவ கழக மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த தீபக் ஜேக்கப் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். விருத்தாச்சலம் சப் கலெக்டராக பணியாற்றி வந்த பழனி விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை கன்னியாகுமரி இண்டஸ்ட்ரியல் கார...

பெரியார் சிலை அகற்றம் - அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

Image
  சிவகங்கையில் பெரியார் சிலையை அகற்றிய அரசு அதிகாரிகளான தாசில்தார் கண்ணன் மற்றும்  டி.எஸ்.பி கணேஷ்குமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சிலையை அகற்றிய அரசு அதிகாரிகளான தாசில்தார் கண்ணனை சிவகங்கை வனத்திட்ட அலுவலராகவும், டி.எஸ்.பி கணேஷ்குமார் சென்னை தலைமை அலுவலக காத்திருப்புப் பட்டியலுக்கும் மாற்றப்பட்டிருக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரில் திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் கட்டிய  வீட்டின் முகப்பில் மார்பளவு பெரியார் சிலையை அமைத்து இருந்தார். வீட்டிற்குள் அமைக்கப்பட்டிருந்த இந்தச் சிலையை திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி 29-ம் தேதி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான், உரிய அனுமதி, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், பெரியார் சிலை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, தேவகோட்டை டி.எஸ்.பி கணேஷ்குமார் தலைமையில் வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து வீட்டின் உரிமையாளரான இளங்கோவனிடம் கூறினர். தொடர்ந்து, `அனுமதி பெற்று தான் சிலை வைக்கவேண்டும், அனுமதி இல்லாததால், சில...

அதானி V/s ஹின்டன்பர்க் அறிக்கை - என்ன செய்யப் போகிறது செபி? என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

Image
  சந்தேகங்கள், யூகங்களின் அடிப்படையில் சில ஆண்டுகளாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆம் அவை உண்மைகளே என்று தெளிவாக்குகிறது ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் 109 பக்க இரண்டாண்டு புலனாய்வு அறிக்கை. அதானி குழும பங்குகளின் மதிப்பு, அதன் அடிப்படையில் அமைந்த சொத்துக்களின் மதிப்பு, பன்மடங்கு ஊதிப் பெருக்கப்பட்டவை என்று ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் பேசுகின்றன. கையாண்ட தில்லுமுல்லு வழிமுறைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பங்குச் சந்தையில் பட்டியலில் இருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் அதன் நிறுவனர் (குடும்பமும் சேர்த்து) 75% சதவிகிதத்திற்கு மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்பது செபி விதி. மீதி பங்குகள் FII எனும் அந்நிய முதலீட்டாளர்கள், DII எனும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், தனி நபர்கள் வைத்திருக்கலாம். இது கார்ப்பரேட் ஜனநாயகம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலான அவரது நிறுவனங்களில் அதானி தொண்டைக்குழி வரைக்கும் 74.8% பங்குகளை வைத்திருக்கிறார். 15 – 18% முதலீடு செய்திருக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் யாரென்று பார்த்தால் மொரீசியஸ் தீவில் கெளதம் அதானி குடும்பத்தினரால் த...

தேவையற்ற சோதனைகளால் தாமதமாகும் விமானங்கள் - மதுரை விமான நிலையத்தில் சிரமத்திற்க்கு உள்ளாகும் பயணிகள்.!

Image
  மதுரை விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளிடம் ஆவணங்கள் பரிசோதனை என்ற பெயரில் தனியார் நிறுவன செக்யூரிட்டிகளை நியமித்து பயணிகளை சோதனையிடுவது, பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுவதுடன் , விமானங்கள் புறப்பாடும் தாமதமாவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  தென் தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையமாக செயல்படுகிறது. உள்நாட்டு பயணிகள் வருகையில் திருச்சியை விட மதுரை விமான நிலையத்தில் அதிகம். கோவையைவிட வெளிநாட்டுப் பயணிகள் வருவது மதுரையில் அதிகம்.  இப்படி முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையத்தில் முன்னர் பாதுகாப்பு சோதனைகள் கடுமையாக இருந்த போதும் பயணிகளுக்கு தேவையற்ற தாமதம் ஏற்பட்டதில்லை. ஆனால் தற்போது ஊழியர்களின் மந்தமான பணி மற்றும் தேவையற்ற சோதனை மூலம் பயணிகள் சிரமத்திற்க்கு ஆளாவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கமாக நுழைவு வாயிலில் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்து உள்ளே அனுப்பி வைப்பர். பின்னர் விமான நிறுவன ஊழியர்கள் மீண்டும் ஆவணங்களை சரி பார்த்து போர்டிங் பாஸ் வழ...

வீடு புகுந்து இளைஞர் வெட்டி கொலை.! - தூத்துக்குடியில் பரபரப்பு.!

Image
தூத்துக்குடி அருகே உள்ள சங்கரப்பேரி பகுதியில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள  ஹவுசிங் போர்டு காலனி கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் கருப்பசாமி (வயது 27). இவர் சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த  பெண்னை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து  உள்ளார். நேற்று இரவு சங்கரபேரி வீட்டில் இருந்தபோது மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தி அரிவாள் மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைககு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கருப்பசாமி கடந்த 2017 ஆம் ஆண்டு சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த அன்பு சாமி என்பவரை கட்டையால் அடித்து கொலை செய்து...

சத்தியமங்கலம், திம்பம் மலைப்பாதை யில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயம் -

Image
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 8 பேர்,கார் ஒன்றில் நேற்று ஜவுளி எடுப்பதற்காக,ஈரோட் டுக்கு சென்று கொண்டிருந்த னர், காரை அலெக்ஸ் பால் ராஜ் (வயது 42) என்பவர் ஓட்டிவந்தார். காரில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர்வந்தனர். சத்திய மங்கலம் அருகே, திம்பம் மலைப்பாதையில்,5 வது சுற்றில், மாலை 5 மணிஅளவில், கார் சென்றபோது திடீரென கார் நிலை தடுமாறி, அருகில்,ரோட்டோர மாக உள்ள 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் அங்குள்ள ஒருமரத்தின் மீது கார் மோதி கவிழ்ந்து நின்றது. இதனால் காருக்குள் இருந்தவர்களின் அழுகுரல் கேட்டு, அவ்வழியே சாலையில் பயணித்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த அங்கு சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர் சத்தி அரசு மருத்துவமனயில், மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். விபத்தில் காயமடைந்த நபர்களில் 3 நபர் களுக்கு கூடுதலான காயம் ஏற்பட்டதால், காரில் பயணித்த அனைவரும், கோவை யில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு, மேல் சிகிச்சை க்காகசென்றனர்.    மேலும் இதுகுறித்து த...

135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த ஸ்ரீவித்யாவுக்கு ’கோவையின் சேவைத் தாய்’ விருது ... தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வழங்கினார்.

Image
10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த கோவை இளம் பெண்ணுக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன், ’கோவையின் சேவை தாய்’ என்ற விருதை வழங்கி அந்த பெண்ணை பெருமைப்படுத்தி உள்ளார்.  தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. ஆனால், பிரசவத்துக்கு பின்னர், உடல் நல பாதிப்புகள் காரணமாக சில தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை. அதேபோல பிரசவத்தின்போது தாய் உயிரிழந்து விட்டாலும், தனிமையில் வாடும் குழந்தைகள், ஆதரவின்றி மீட்கப்படும் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் ஆகியோருக்கும் தாய்ப்பால் இல்லாத நிலை இருக்கிறது. இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பெரும் பிரச்சினையாக உள்ளது.  இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்க அரசு சார்பில் தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை பற்றி பலர் அறிந்திருந்தாலும், தாய்மார்கள் சிலர் தானம் அளிக்க முன்வருவதில்லை. ஒரு சிலர் முன்வருகிறார்கள். ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் முன்னுதார...

திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம், குறும்படம் வெளியீடு... மேயர் தினேஷ்குமார் பங்கேற்பு

Image
 திருப்பூர் மாநகராட்சி,திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் துப்புரவாளன் அமைப்பு இணைந்து நடத்திய திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியிட்டார்.  மாநகர ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, ரோட்டரி ஆளுநர் இளங்குமரன், திருப்பூர் மேற்கு ரோட்டரி தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் குப்பை மேலாண்மையை சிறப்பாக கையாளும் பள்ளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். வீரபத்மன், பாலகிருஷ்ணன் ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு சேவை அமைப்பினர் கலந்து கொண்டனர்.   மேலும் துணை மேயர்ஆர்.பாலசுப்பிரமணியம் , மண்டல தலைவர்கள் உமாமகேஸ்வரிவெங்கடாஜலம் மற்றும் கோவிந்தராஜ் பகுதி கழகச் செயலாளர் மியாமி அய்யப்பன் மற்றும் முருகசாமி , மாமன்ற உறுப்பினர்கள் சின்னச்சாமி, சேகர், அனுசுயா தேவி, பத்மாவதி, தாமோதரன், கவிதா நேதாஜி கண்ணன் மற்றும் சாந்தாமணி , வட்ட கழக செயலாளர் சுகுமார் ,மாநகர சுகாதார அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள...

தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கினார்களா?... காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பேட்டி - வீடியோ

Image
 திருப்பூர்: மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பேட்டி. திருப்பூர் மாநகரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி பரவி வருகிறது. இரண்டு நபர்கள் டீ குடிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்சனை. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. யாருக்கும் காயமோ? பாதிப்போ இல்லை. இதனை இன்று நடைபெற்றது போல தவறாக சித்தரித்து பரப்பி உள்ளனர்.  சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இரண்டு தனிப்படை அமைத்துள்ளோம். ஒரு தனிப்படை சம்பவம் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு தனிப்படை சமூக வலைதளங்களில் தவறாக தகவல் பதிவிட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்... அமமுக மாவட்ட செயலாளர் அ.விசாலாட்சி பேச்சு

Image
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க., வேட்பாளர் ஏ.எம். சிவப்பிரசத்துக்கு குக்கர் சின்னத்தில் வாக்குகளை திரட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த திருப்பூர் மாநகர் மாவட்ட அமமுக ஆலோசனைக் கூட்டம் கொங்கு மெயின் ரோட்டில் நடைபெற்றது. கழக தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் மாநிலம் முழுவதும் 294 பேரை பொறுப்பாளர்களாக நியமித்து இருக்கிறார்கள். திருப்பூரில் இருந்து இருவரையும் நியமித்து இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே தேர்தல் பொறுப்பாளர்கள் என்று நினைக்காமல், அனைவருமே களத்தில் இறங்கி முழுமையாக பணியாற்ற வேண்டும். தமிழக அரசியலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு திருப்புமுனையாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமைய வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் முழு அர்ப்பணிப்புடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி இருந்து இறுதிக்கட்ட பிரசாரம் வரை ஓயாமல் பணியாற்றி மக்கள் செல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அ.விசாலாட்சி பேசினார். இந்த...

வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க செயின் பறிப்பு : 19 வயது இளைஞர் கைது! - இருசக்கர வாகனம் பறிமுதல்.!

Image
  தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சித்திரை பாபு என்பவரது மனைவி சாரதா (40) என்பவர் கடந்த 24.01.2023 அன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து சாரதா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி, மத்தியபாகம் காவல் நிலைய காவலர்  செந்தில்குமார், தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை ...

"பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள சாலையில் வலதுபுறமாக நடந்து செல்ல வேண்டும்" - திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள்.!

Image
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர்க்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்பான வேண்டுகோள். வருடம் தோறும் மார்கழி மற்றும் தை மாதங்களில் பக்தர்கள் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருச்செந்தூருக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாக வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு சாலை வழியாக நடந்து வரும்பொழுது சாலையில் இடது புறமாகவே குழுக்களாக நடந்து செல்வதால் அதே சாலையை பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் எப்பொழுதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி இடது புறமாகவே வாகனத்தை இயக்கவேண்டும் என்பதால் அதே இடதுபுற சாலையில் பக்தர்கள் குழுக்களாக நடந்து வரும்பொழுது வாகனங்கள் பக்தர்கள் மீது மோத வாய்ப்புள்ளதாலும், அவ்வாறு வாகனங்கள் மோதுவதை எதிர்பார்க்க இயலாததாலும், கனரக வாகனங்கள் பக்தர்கள் மீது...

பழனி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்...லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Image
 பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறக்கூடிய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.   விழாவிற்காக 23 ஆம் தேதி மலை மீது 90 யாகசாலை அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க எட்டு கால பூஜை நடைபெற்றது. 200 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் , கந்தன் அலங்காரம் என முருக கடவுளை போற்றிபாட தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக கங்கை, காவிரி, சண்முகநதி என பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.  சிவாச்சாரியார்கள் புண்ணிய தீர்த்தத்தை ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரம் பரிவார தெய்வங்கள் சன்னதிகள் மேல் கொண்டு சென...

ஈரோடு மாவட்டம், சத்தி கொமாரபாளையம் ஊராட்சியில், 74 வது குடியரசு தினவிழா.

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமார பாளையம் ஊராட்சியில் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, கொமாரபாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கொடி பேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தமிழ்த் தாய் வாழத்து பாடினர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன். பி.காம் தலைமை ஏற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து, குடியரசு தின உரை நிகழ்த்தி, இனிப் புகள் வழங்கினார்.  நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிச்சாமி, வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு ,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் விக்னேஸ் வரி , கிருஷ்ணமூர்த்தி, வசந்தி,சாவித்திரி, வடிவேலு, சுகுமார், கதிரி, சுந்தரம், ரத்னா, பெரியசாமி,மற்றும் அதிமுக கட்சி நிர்வாகி கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக ஊராட்சி செயலாளர் குமார் நன்றி கூறினார்.

கால்பந்து:சவுதி சூப்பர் கப் தொடரில் இருந்து வெளியேறியது ரொனால்டோவின் அல் நசார் அணி!

Image
  அல் இத்திஹாத் அணியுடனான அரையிறுதிப்போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது கிங் ஃபஹத் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற சவுதி சூப்பர் கப் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நாசர் அணி வியாழன் அன்று சவுதி சூப்பர் கோப்பையில் ரியாத்தில் அல் இட்டிஹாத்திடம் 3-1 என்ற கணக்கில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது, இதனால் சவுதியில் உள்ள ரொனால்டோ ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்.!

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் மாபெரும் திமுக பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்றது. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் மாநகராட்;சி மண்டலத்தலைவருமான வக்கீல் பாலகுருசாமி தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், சங்கர், மாநகர துணை அமைப்பாளர்கள் டைகர் வினோத், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:-  தமிழ்மொழி பாதுகாக்க தமிழ்நாடு எனப்பெயர் வர ஜாதி மதம் பாராமல் வளர்த்த தமிழை பெரியார் அண்ணா காமராஜர் கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டிக்காத்து வருகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி அடிமை ஆட்சியை செய்துக்கொண்டு ஒன்றிய அரசுக்கு தலையாட்டி பொம்மையாக செயல்பட்டார். ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை எதிர்த்தார். அவர் மறைவிற்கு பின்பு எல்லா உரிமையையும் விட்டுக்கொடுத்து மோடிக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டு பணியாற்றினார். தமிழ்நாடு என்று பெயர் வருவதற்கு சங்க...

ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம்.!

Image
   தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில்  அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, புதிய ரேசன் கடை, அங்கன்வாடி மையம், விளையாட்டு மைதானத்துடன் கூடிய பூங்கா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செய்து கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கை சிலவற்றிற்கு அதிகாரிகள் தங்களது துறைச் சார்ந்த நடவடிக்கை குறித்து தகவல் தெரிவித்தனர்.  ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசுகையில்: மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை ஏற்கனவே கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் பட்டா கேட்டு பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் சுமார் 2000 பேருக்கு கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைவில் பட்டா வழங்க இருப்பதாக உறுதியளித்துள்ளனர்.  வடக்கு ச...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பண மோசடி - தூத்துக்குடி நபர் கைது.!

Image
  தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக போலியாக விளம்பரப்படுத்தி ரூ.10 லட்சத்திற்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியை சேர்ந்த ஷேக் முகைதீன் மகன் முகமது அப்பாஸ் (36) என்பவர் கடந்த 27.012022 அன்று தூத்துக்குடியில் வைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்றும், அதில் அபுதாபியிலுள்ளஅபுதாபி கேஸ்கோ என்ற கம்பெனிக்கு வேலைக்கு ஆள் எடுப்பதாகவும் துண்டுபிரதிகள் மூலம் விளம்பரப்படுத்தியதின்பேரில், அந்த விளம்பரத்திலுள்ள தொலைபேசி எண்ணிற்கு தூத்துக்குடி டேவிஸ்புரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பெரியசாமி மகன் காமராஜ் (42) மற்றும் சிலர் தொடர்பு கொண்டுள்ளனர்.  அவர்களிடம் முகமது அப்பாஸ் வெளிநாடு செல்வதற்காக தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்தான் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி, மருத்துவமனையில் கட்டணம் செலுத்துவதற்காக ஒரு நபருக்கு ரூ.7,500/- வீதம் 16 பேருக்கு ரூ.1,20,000/-மும், அதேபோல் தூத்துக்குடி தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்த 8 நபர்களிடம் தலா ரூ.20,000/- வீதம் ரூ.1...

தூத்துக்குடி மாநகராட்சியில் 74வது குடியரசு தினவிழா.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாட்டின் 74வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 74வது குடியரசு தினவிழா மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றினார். விழாவில் தொடர்ந்து 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 26 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் போட்டியில் முதல் பரிசு வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர் சஞ்சய் என்பருக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும் தூத்துக்குடி நகர வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.  விழாவில் பொறியாளர் அசோகன், உதவி ஆணையர்கள் சந்திரமோகன், சரவணன், சேகர், ராமசந்திரன், தனசிங், மாநகர அலுவலர் தினேஷ், மாநகர் நல அலுவலர் ரங்கநாதன், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டேன்லி பாக்கியநாதன், அரிகணேஷ், ராஜசேகரன், ராஜபாண்டி, மாநகர பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், உதவி செயற்பாெறியாளர்கள் ராமசந்திரன், ஆறுமுகம், காந்திமதி, நாகராஜன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும...

தூத்துக்குடி குடியரசு தின விழா - தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ்,மரியாதை!

Image
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சி இன்று (26.01.2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், கலந்துகொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப்புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் 125 பேர் கலந்துகொண்ட பறையாட்டம், கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 406 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு விலையில...

தூத்துக்குடி விமான நிலையத்தில் குடியரசு தின விழா!

Image
  தூத்துக்குடி விமான நிலையத்தில் நம் நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விமான நிலைய இயக்குனர் சிவபிரசாத் தேசியக்கொடி ஏற்றி பாதுகாப்பு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில் விமான நிலைய பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உமாதேவி, எலக்ட்ரிக்கல் துறையின் துணைப் பொது மேலாளர் பிரான்சிஸ் சேவியர், கம்யூனிகேஷன் பிரிவின் உதவி பொது மேலாளர் பிரிட்டோ, விமான நிலைய மேலாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

பழனியில் அடிவாரம், படிப்பாதை கோவில்களில் கும்பாபிஷேகம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு

Image
பழனி முருகன் கோயில் மலைஅடிவாரம், படிபாதை கோயில்களில் குடமுழுக்கு. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெறுகிறது.  இன்றைய தினம் கிரிவீதியில் உள்ள ஐந்து மயில்கள் மற்றும் அருள்மிகு பாத விநாயகர், அருள்மிகு சேத்ரபாலர், அருள்மிகு சண்டிகாதேவி முதல்  படிப்பாதை மண்டப அருள்மிகு விநாயகர்கள், அருள்மிகு இடும்பன், அருள்மிகு கடம்பன், அருள்மிகு குராவடிவேலர், அருள்மிகு அகஸ்தியர், அருள்மிகு சிவகிரீஸ்வரர், அருள்தரும் வள்ளிநாயகி, அருள்மிகு கும்மினி வேலாயுதசுவாமி முதலான பத்திற்க்கும் மேற்பட்ட உபதெய்வ சன்னதிகளில்  திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. முன்னதாக மலைமீது அமைக்கப்பட்டுள்ள 90 யாகசாலைகளில்   சிவாச்சார்யார்கள் தீ வளர்த்து  விதை, வேர், இலை, தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்தனர். ஓதுவார்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பன்னிமுறு திருமுறை விண்ணப்பம், கந்தர் அலங்காரம், திருபு...

ஈரோடு கிழக்கு தொகுதியிலே அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்... முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

Image
திருப்பூர் மாநகர் மாவட்டம் கழகம் , மாநகர் மாவட்ட மாணவரணியின் சார்பாக தாய்மொழி தமிழை  காக்கும் உரிமைப் போரில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்,வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,  ருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான   சு.குணசேகரன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன்  தலைமை கழக பேச்சாளர்கள் வழக்கறிஞர் விஜயலட்சுமி, எம்.எம். யூசூப், திஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர்  ஏம்.எம்.சதீஷ்  தலைமை தாங்கினார்.   மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினரு...