அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு... திருப்பூரில் முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் கொண்டாட்டம்

 அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டியும், பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டியும் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இதை தொடர்ந்து பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து 

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன் தலைமையில் அதிமுகவினர் திரண்டு திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் பூலுபபட்டி பாலு, சங்கீதா சந்திரசேகர், பகுதி கழக செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கேசவன், ஏ.எஸ்.கண்ணன், வி. பி.என்.குமார், கருணாகரன், திலகர் நகர் சுப்பு, ஹரி ஹரசுதன், வேலுமணி சார்பு அணி நிர்வாகிகள் சிட்டி பழனிசாமி, கண்ணபிரான், சுந்தராம்பாள், தம்பி மைதீன், ஆண்டவர் பழனிசாமி, தாமோதரன், தனபால், சையது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்