தூத்துக்குடியில் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம்.! - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.!


 தூத்துக்குடியில் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம்.! - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.!

தூத்துக்குடியில் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்த கருத்தபாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கப்பட உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி  தெரிவித்தார். 

இது தொடர்பாக மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கருத்தபாலமானது மழைநீர் செல்வதற்கு தடையாக இருந்ததை தொடர்ந்து அதனை அகற்றி வழி ஏற்படுத்தி இருந்தோம். இந்த பாலமானது பிரதானமான ஓடையில் இருந்ததாலும் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்ததாலும் தற்போது மேலும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மீது வரும் நாட்களில் புதிய பாலம் ஒன்று அமைய உள்ளது. அதுவரை பொதுமக்கள் சிரமின்றி செல்வதற்கு அதன் அருகே உள்ள தனியார் இடத்தில் பணிகள் முடியும் வரை பொதுமக்கள் பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார். ஆய்வின்போது, சமூக ஆர்வலர் ஜசக், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!