தூத்துக்குடியில் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம்.! - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.!


 தூத்துக்குடியில் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம்.! - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.!

தூத்துக்குடியில் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்த கருத்தபாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கப்பட உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி  தெரிவித்தார். 

இது தொடர்பாக மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கருத்தபாலமானது மழைநீர் செல்வதற்கு தடையாக இருந்ததை தொடர்ந்து அதனை அகற்றி வழி ஏற்படுத்தி இருந்தோம். இந்த பாலமானது பிரதானமான ஓடையில் இருந்ததாலும் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்ததாலும் தற்போது மேலும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மீது வரும் நாட்களில் புதிய பாலம் ஒன்று அமைய உள்ளது. அதுவரை பொதுமக்கள் சிரமின்றி செல்வதற்கு அதன் அருகே உள்ள தனியார் இடத்தில் பணிகள் முடியும் வரை பொதுமக்கள் பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார். ஆய்வின்போது, சமூக ஆர்வலர் ஜசக், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்