கன மழை எச்சரிக்கை- இன்று 28.11.2025 முதல் நாளை 29.11.2025 பிற்பகல் வரை தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்- அனைத்து கள அலுவலர்களும் முழு அளவில் தயார் நிலையில் இருக்க ஆட்சியர் உத்தரவு.!
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக இன்று 28.11.2025 முதல் நாளை 29.11.2025 பிற்பகல் வரை தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
அனைத்து கள அலுவலர்களும் முழு அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று முன் எச்சரிக்கை செய்யப்படுகிறது. ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க வேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை.!
