முத்தையாபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்.!

 

தூத்துக்குடி முத்தையாபுரம் கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றன. கருத்தரங்கில் கிரேஸ் பாலிடெக்னிக்  கல்லூரியின் முதல்வர் ஜோஸ் சசிகுமார் தலைமை தாங்கினார்.

போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவர்களுக்கு போக்குவரத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் உயிர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், ஆர்டிஓ பாத்திமா பெர்வின், போக்குவரத்து துணை ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர்கள் மாணவர்களுக்கு போக்குவரத்து  குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள்.

மேலும் போக்குவரத்து சம்பந்தமான விளைவுகள் அதிலிருந்து மாணவர்கள் விலகி வந்து வாழ்வியல் முறைகளையும் பற்றியும் மாணவர்களுக்கு மாவட்ட சட்டபணிகள் ஆணைக் குழுவினர் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சுதர்சன், ராஜா விரிவாக வழங்கினார்கள். கருத்தரங்கில் மாணவர்கள் ஆர்வத்துடன் போக்குவரத்து விதிமுறைகளையும், விபத்து பற்றியும் கற்றிந்தனர்.  நிகழ்ச்சியை கல்லூரி விரிவுரையாளர்கள் வழி நடத்தினார்கள்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி