Posts

Showing posts with the label தமிழகம்

பச்சைமலை முருகன் கோவில் சூரசம்ஹார விழா: சூரனை வதம் செய்தார் முருகன்

Image
 கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோயிலில் சூரசம்கார நிகழ்வு குறைந்தளவு பக்தர்களுடன் கோயில் பிரகாரத்திலேயே நடைபெற்றது. முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்துää சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள மொடச்சு10ர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார். இவ்வாறு பிரதித்தி பெற்ற அருள்மிகு பச்சமலை பாலமுருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கந்த சஷ்டி சூரசம்காரவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ச...

16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Image
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை சு...

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2000 தீபாவளி பரிசு... எடப்பாடியாரின் பலே திட்டம்

Image
கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த தமிழக மக்களுக்கு உதவ தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக குடும்பங்களுக்கு இந்த தொகையை தருவதற்காக, குடும்பம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்க அனுமதியும், ஜி.எஸ்.டி வரியிலிருந்த மாநில பங்கிலிருந்து 3000 கோடியை இதற்காக வழங்கும் படியும் மத்திய அரசிடம் முதலமைச்சர் இ.பி.எஸ் கோரியிருந்தார்.  இதையடுத்து சமீபத்தில் சென்னை லந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நிதித் துறை செயலர் கிருஷ்ணன், வணிக வரித்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் சந்தித்து அரசின் கோரிக்கையை வலியுறுத் தினர்.  இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 3000 கோடியை விடுவிப்பதாகவும், தமிழக மக்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்கவும் மத்திய அரவு அனுமதி அளித்துள்ளது.  இதற்கான கடிதத்தை மத்திய நிதி அமைச்சகம், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.  இதையடுத்து, வருகிற நவம்பர் மாதம் தீபாவளியையொட்டி தமிழகத்தில் குடும்பம் ஒன்றுக்கு தலா 2000 ...

உயிரிழந்த தாயின் உடலை பார்க்க பாச போராட்டம் நடத்திய கொரானா நோயாளி: கண்கலங்க வைத்த இறுதி அஞ்சலி நிகழ்வு

Image
உயிரிழந்த தாயின் உடலை பார்க்க பாச போராட்டம் நடத்திய கொரானா நோயாளி, பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி நெகிழ்ச்சி சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பா நேரி பகுதியை சார்ந்தவர் மின்னல் அம்மா உடல் நலிவுற்று நிலையில் நேற்று காலமாகிவிட்டார். இவரது மகன் முருகேசன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தாய் இறந்த தகவலறிந்த முருகேசன் கடைசியாக தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரி மருத்துவமனையில் மன்றாடி உள்ளார். தகவலறிந்த வருவாய் துறையினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முருகேசனுக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து நேற்றிரவு அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்து சென்றுள்ளனர். தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதியில் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்த சம்பவம் அப்பகுதி மக்...

லாரி நிறைய கரும்பு.. ரசித்து ருசித்த காட்டு யானைகள்...டிரைவர்கள் பீதி

Image
தாளவாடி அருகே தமிழக கர்நாடக எல்லையில் போக்குவரத்து பாதிப்பால் நின்றுகொண்டிருந்த கரும்பு லாரியில் காட்டுக்குள் இருந்து வந்த காட்டு யானைகள் கரும்புகளை அலேக்காக அள்ளி தின்றது லாரி ஓட்டுநர்கள், பொதுமக்களை திகில் அடையச் செய்தது.     ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள  புளிஞ்சூர் சோதனைச்சாவடி அருகில் கர்நாடக மாநிலத்திலிருந்து தேங்காய் மட்டை ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. இதனால் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இதனால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்நிலையில் சாலையில் நின்று கொண்டிருந்த கரும்பு லாரிகளை பார்த்த காட்டு யானைகள் கரும்புகளை சுவைப்பதற்காக சாலையில் வந்து அட்டகாசம் செய்தன. ஒரு யானை லாரியில் இருந்த கரும்புகளை பிடுங்கி ஆசை தீர தின்றது. மேலும் லாரியில் இருந்த கரும்புகளை திண்பதற்காக சாலையிலேயே முகாமிட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

திருப்பூரில் 10 ஊராட்சிகளின் அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகிகள்ஆலோனை: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., திருப்பூர் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் சார்பாக  பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் கணக்கம்பாளையம் காந்திநகர் உடையார் திருமண மண்டபத்திலும், ஈட்டிவீரம்பாளையம் பெருமாநல்லூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் பெருமாநல்லூர் பிவி திருமண மகால் மற்றும் பட்டம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், சொக்கனூர் ஊராட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தொரவலூரிலும் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு  திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  எம் எஸ் எம் ஆனந்தன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே என் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில்,  திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  எம் எஸ் எம் ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:   2011 சட்டமன்ற தேர்தலில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் தேர்தலை சந்தித்தோம். அப்போது பு...

5 மாதத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் ரயில் ஓடும்... அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ்... முதல்வர் புது அறிவிப்பு

Image
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் 30.9.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்...

ஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..

Image
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன...

திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Image
திருப்பூர் லேடிஸ் சர்க்கிள் -44ன் ஏற்பாட்டில், " கொரோனா காலத்தில் எப்படி பதட்டம் அடையாமல் அமைதியாக இருக்க வேண்டும்" என்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி "டாக்டர் வினு" என்பவரால், மரியாலயம் மகளிர் காப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததற்கு தங்கள் நன்றியை லேடிஸ் சர்கிளுக்கு குழந்தைகள்  தெரிவித்துக் கொண்டனர்.

வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்

வாழ்வாதாரம் இழந்த தங்களை அகதிகளாக அறிவிக்க கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் வாகனங்கள் இயக்கப்படாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் சாலை வரி செலுத்தும் முறையிலும் தங்களுக்கு சலுகைகள் வழங்கப்படாத நிலையில் ஆகஸ்ட் மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் தற்போது பழைய நடைமுறையே பின்பற்றப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிஉள்ளதாகவும்,  இ பாஸ் முறையை ரத்து செய்ய கோரியும், மண்டலங்களுக்கு இடையே வாகனங்களை இயக்க அனுமதி அளிக்க கோரியும் இல்லை என்றால் தங்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே வந்த ஓட்டுநர்...

97 பேர் மரணம்...5,864 பேருக்கு கொரோனா தொற்று

Image
தமிழ்நாட்டில் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும் மரணம் அடைந்தோர் 97 பேர் ஆவர். இதன் மூலம் இதுவரை மொத்தமாக 2,39,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 3,838 பேர் செத்துப்போய் உள்ளனர்.  இதில் 57,962 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் மட்டும் 1,175 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 354 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. திருவள்ளூரில் 325 பேருக்கும், கோவையில் 303 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சென்னையில் மட்டும் 18 பேர் இறந்து உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருநெல்வேலியில் 8 பேர் செத்துள்ளனர்.  இன்று மட்டும் 5,295 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதுவரை மொத்தமாக 1,78,178 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று விட்டனர்.  இன்று தான் அதிகபட்சமாக  97 பேர் கொரோனாவால் இறந்து போய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

இ-பாஸ் கட்டாயம், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பொது போக்குவரத்து கிடையாது... ஆகஸ்டிலும் தற்போதைய நிலையே தொடரும்

தமிழகத்தில் ஊரடங்கு தற்போதைய நிலையே தொடரும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், ‘ தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை தொடரும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம். ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வில்லா முழு ஊரடங்கு தொடரும்.  பொது,  தனியார் போக்குவரத்துக்கு தடை தொடரும்.  உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்பட அனுமதி இல்லை. சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து சுதந்திர தினம் கொண்டாடலாம். என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  ஜூலை மாதத்தில் இருந்த தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் அப்படியே தொடருகிறது.   இதுகுறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முழு அறிக்கை இதோ: இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின...

88 பேர் பலி... 6,972 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 7 ஆயிரம் பாதிப்பு என்ற எண்ணிக்கைக்கு ஒரு சில எண்கள் மட்டுமே குறைவாக உள்ளது.  இன்று மட்டும் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரையிலான மொத்த தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,27,688 ஆக உள்ளது.  இதில் 54,896 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 1,66,956 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்.  இன்று மட்டும் 88 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை  3,659 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1107 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. 

தமிழ்நாட்டில் 6,986 பேருக்கு கொரோனா.. 85 பேர் மரணம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. என்றைக்குத்தான் உச்சமடைந்து எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் என தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உ ள்ளனர்.  இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 6,986 ஆக அதிகரித்து உள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,13,723 ஆக உள்ளது. இதில் 52,273 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  சென்னையில் மட்டும் 1,155 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 

திருப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

Image
திருப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்க கோரி மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட  எஸ்.வி காலனி பகுதியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்ததை அடுத்து அந்த பகுதி முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார் . மாவட்ட ஆட்சியர் சென்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து வாங்க தங்களை அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மூலமாக பாதுகாப்பான முறையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.மேலும் வெளியாட்கள் யாரும் வெளியே இருந்து உள்ளே வரக்கூடாது என்பதை பொதுமக்கள் உறு...

கோவையில் மூன்று கோயில்கள் சேதப் படுத்தியதற்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம்

Image
கோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தியதற்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருக்கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள்.     மயிலாடுதுறை ஆன்மிகப்  பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:     கோயம்புத்தூரில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை கடும் கண்டனம் தெரிவிக்கிறது.  தொடர்ந்து வழிபாட்டுத் தலங்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி வருவது வேதனை அளிக்கிறது.   ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையான காவல்துறை தமிழக காவல்துறை என்ற பெயரெடுத்த தமிழக காவல்துறை தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.  ஊரடங்கு காலத்தில் பெரிய திருக்கோயில்கள் எல்லாம் நடை சாத்தப்பட்டு இருக்கக்கூடிய வேளையிலே கோவையிலே மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது தமிழக அரசின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது.   சேதப்படுத்திய உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்...

கொரோனா காலம்: வருமான இழப்பை சமாளிக்கும் வித்தைகள்

Image
கொரோனா வைரஸ் பரவி வருகிறது சீனாவை முற்றிலுமாக முடக்கிவிடும். சீனா பொருளாதாரத்தில் சரிந்துவிடும் என பல தரப்பிலும் பேச்சு விழுந்தது சாதாரண சாலையோர மக்கள் கூட இதுகுறித்த விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாருக்கும் தெரியவில்லை இந்த நிலை இந்தியாவிற்கும் வரும் கடைக்கோடியில் உள்ள நாமும் இதில் பாதிக்கப்படுவோம் என ஒருவரும் நினைத்துக்கூட பார்க்காத சமயம் அது.  அடுத்தகட்டமாக இத்தாலி பிரான்ஸ் அமெரிக்கா என ஒவ்வொரு நாடுகளாக கொரோனா தன் கொடிய கரங்களை கொண்டு வாரி அணைத்துக் கொண்டது. அந்த சமயத்தில் இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருவன் தன் கால் தடத்தை பதித்து இருந்தது.  அப்பொழுது இந்தியாவில் ஊரடங்கு என்ற ஒரு வார்த்தையும் பிரபலமாகியது . இதனைக் கருத்தில் கொண்ட இந்திய அரசும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தியது. ஆரம்பத்தில் இதனால் ஏழைகள் பலரும் பாதிக்கப்பட்டனர். அதாவது தங்களின் அண்டை மாநிலங்கள் மற்றும் தொழில் வாய்ப்பும் மிகுந்த பகுதிகளில் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் இருந்து மக்கள் தொழிலுக்காக புலம்பெயர்ந்து இருந்தனர்.  இவர்கள் ஊரடங்கு காலத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததாலும் தங்களது உ...

தமிழகத்தில் குறைகிறது கொரோனா...இன்று 3,616 பேருக்கு தொற்று...உச்சநிலை முடிவுக்கு வந்ததா

Image
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொற்றுப்பரவலின் வேகம் குறைந்து உள்ளது. 1 ஆம் தேதி 3882 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. 2 ஆம் தேதி 4343 பேருக்கு தொற்று 3-ஆம் தேதி 4,329 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 4-ம் தேதி 4,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 5 ஆம் தேதி 4,150 பேருக்கு தொற்று உறுதியானது. 6-ம் தேதி 3,827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 3,616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னையில் வெகுவாக பாதிப்பு குறைந்ததே கொரோனா பரவல் வேகம் குறைந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சென்னை மாநகரில் மட்டும், 1-ம் தேதி 2,182 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. 2 ஆம் தேதி 2,027 பேருக்கு தொற்று 3-ஆம் தேதி 2,082 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 4-ம் தேதி 1,842  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 5 ஆம் தேதி 1,713 பேருக்கு தொற்று உறுதியானது. 6-ம் தேதி1,747  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று சென்னையில்  1,203 ப...

திருப்பூர் அதிமுக தொழில்நுட்பப்பிரிவில் பணியாற்ற  2,347 பேர் விண்ணப்பம்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் நேர்காணல்

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக, சார்பில்,தொழில்நுட்பப்பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி, கடந்த 3 நாட்களாக திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், கழக அலுவலகத்தில் நடந்தது வந்தது.  இதில், 2,347 பேர் கழக தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்ற விண்ணப்பித்து இருந்தனர்.  இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி அளவிலான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், கழக தொழில்நுட்பப்பிரிவின் மேற்கு மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் புதிதாக விண்ணப்பித்தவர்களை நேர்காணல் நடைபெற்றது.   இந்த நிகழ்வுக்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அப்போது தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்ற விண்ணப்பித்தவர்கள் மத்தியில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகைய...

திருப்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் உள்பட 16 பேருக்கு கொரோனா

Image
திருப்பூர் மாவட்டத்திலும்  மற்ற மாவட்டங்களை போலவே கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்து உள்ளது. ----------------------------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------------------------- நேற்று வரை 204 பேருக்கு தோற்று இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 16 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.  இதில் திருப்பூர் மொரட்டுப்பாளையத்தை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  மேலும், திருப்பூர் மங்களம் ரோடு பாரப்பாளையத்தை சேர்ந்த 33 வயது ஆண் மற்றும் 32 வயது ஆண் என இருவருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது.  திருப்பூர் சோளிபாளையத்தில் 25 வயது ஆண், சஞ்சய் நகரில் 32 வயது ஆண், 51 வயது ஆணுக்கும், அனுப்பர்பாளையம் ரங்கநாதபுரத்தில் 27 வயது பெண், அனுப்பர்பாளையத்தில் 26 வயது ஆண், அனுப்பர்பாளையம் காந்தி ரோட்டை சேர்ந்த 28 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.  ராயபுரத்தில் 45 வயது ஆணுக்கும் தொற்று  உறுதி செய்யப்ப...