Posts

"டிப்ளமோ படித்தவர்களும் இனி சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Image
+2 படிக்காமல் டிப்ளமோ, பி.இ. படித்தவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்க தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  டிப்ளமோ, பி.இ. படித்தவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதி கோரி கோவை மாணவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்ரா: டாக்ஸியில் தனியாக சென்ற பெண் மூன்று பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்.!- டாக்ஸி டிரைவர் உட்பட மூன்று பேர் கைது.!

Image
  உத்தர பிரதேசம் - புதன்கிழமை அதிகாலை யமுனா விரைவுச்சாலையில் 23 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜெய்வீர், டிட்டு மற்றும் சாச்சா என அடையாளம் காணப்பட்ட ஒரு டாக்ஸி டிரைவர் உட்பட மூன்று ஆண் குற்றவாளிகள் சம்பவம் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் நொய்டாவில் இருந்து ஷேர் டாக்ஸியில் தான் பயணித்ததாகவும், வழியில் மற்ற பயணிகள் இறங்கியபின் தான் தனியாக இருந்ததை அடுத்து, டாக்சி டிரைவர் உட்பட மூன்று பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண் போலிஸாரிடம் புகார் கூறினார். "புதன்கிழமை காலை எத்மத்பூர் காவல் நிலையத்தை அடைந்த ஒரு பெண், யமுனா விரைவு சாலையில் மூன்று ஆண்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்தார்" என்று ஆக்ரா போலீஸ் கமிஷனர் பிரீதிந்தர் சிங் கூறினார். கான்பூரில் உள்ள தனது சொந்த இடமான அவுரையாவுக்கு செல்ல வேண்டியிருந்ததால், டாக்ஸி டிரைவர் தன்னை ஃபிரோசாபாத்தில் இறக்கி விடுவதாக புகார் அளித்துள்ளார். அது நள்ளிரவாகிவிட்டது, டாக்ஸியில் ஏறிய இரண்டு நண்பர...

பொங்கல் சிறப்பு ரயில்கள் - இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு ஆரம்பம்

Image
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 12 மற்றும் 13ஆம் தேதியன்று சிறப்பு ரயில்கள் இயக்கம் - இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு ஆரம்பம் என, தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாகிறது.!

Image
  சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாகிறது - விமான நிலையங்களில் அடுத்தவாரம் முதல் செயல்படுத்த மத்திய அரசு முடிவு...

மதுரை : 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை.!

Image
  மதுரை விளாங்குடி அடுத்துள்ள கரிசல்குளம் மந்தை திடல் அருகே கட்டட வேலை செய்து வரும் பூமிநாதன் எனும் 21 வயது இளைஞரை நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது வீடு புகுந்து நான்கு பேர் கொண்ட கும்பல் தலை கைகளில் சுமார் 20 முறை வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மதுரை கூடல் புதூர் காவல்நிலையத்திற்க்கு அளித்த தகவலின் படி பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கழுத்தை நெரித்த கடன் தொல்லை: தூத்துக்குடியில் திமுக நிர்வாகி தூக்கிட்டுத் தற்கொலை - போலீஸ் விசாரணை.!

Image
  தூத்துக்குடியில் கடன் பிரச்சனையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு திமுக நிர்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அண்ணா நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் முத்தையா மகன் பால் மாரி(42). இவர் முருகேசன் நகர் மெயின் ரோட்டில் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும்,  திமுக மாணவரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். புதிதாக வீடு கட்டியது, மற்றும் ட்ரான்ஸ்போர்ட் அமைத்தது போன்ற காரணங்களினால் பால்மாரி அதிகமாக கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடனிலிருந்து மீள்வதற்கு வழி தெரியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அவர் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும்பணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கிவைத்தார்.

Image
தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும்பணிக்கான பூமிபூஜையுடன் அடிக்கல்நாட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பேசுகையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுரையின் படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி இந்த கட்டுமான பணியை துவங்கியுள்ளோம். மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் நீண்டநாளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த மீன்சந்தை அமைக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் முடிந்து மீன்சந்தை இயங்கும் நேரத்தில் தூய்மையை கடைபிடித்து சுகாதாரத்தை பேணிபாதுகாத்து நல்லமுறையில் பயன்னடைய வேண்டும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கும் முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும். என்று பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராணி, பா...