மதுரை : 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை.!

 

மதுரை விளாங்குடி அடுத்துள்ள கரிசல்குளம் மந்தை திடல் அருகே கட்டட வேலை செய்து வரும் பூமிநாதன் எனும் 21 வயது இளைஞரை நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது வீடு புகுந்து நான்கு பேர் கொண்ட கும்பல் தலை கைகளில் சுமார் 20 முறை வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மதுரை கூடல் புதூர் காவல்நிலையத்திற்க்கு அளித்த தகவலின் படி பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்