கழுத்தை நெரித்த கடன் தொல்லை: தூத்துக்குடியில் திமுக நிர்வாகி தூக்கிட்டுத் தற்கொலை - போலீஸ் விசாரணை.!

 


தூத்துக்குடியில் கடன் பிரச்சனையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு திமுக நிர்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அண்ணா நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் முத்தையா மகன் பால் மாரி(42). இவர் முருகேசன் நகர் மெயின் ரோட்டில் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும்,  திமுக மாணவரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். புதிதாக வீடு கட்டியது, மற்றும் ட்ரான்ஸ்போர்ட் அமைத்தது போன்ற காரணங்களினால் பால்மாரி அதிகமாக கடன் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடனிலிருந்து மீள்வதற்கு வழி தெரியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அவர் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!