டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும்பணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கிவைத்தார்.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும்பணிக்கான பூமிபூஜையுடன் அடிக்கல்நாட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பேசுகையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுரையின் படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி இந்த கட்டுமான பணியை துவங்கியுள்ளோம்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் நீண்டநாளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த மீன்சந்தை அமைக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் முடிந்து மீன்சந்தை இயங்கும் நேரத்தில் தூய்மையை கடைபிடித்து சுகாதாரத்தை பேணிபாதுகாத்து நல்லமுறையில் பயன்னடைய வேண்டும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கும் முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும். என்று பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராணி, பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், திமுக நிர்வாகிகள் ராயப்பன், பொன்னுச்சாமி, ராமச்சந்திரன், கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!