Posts

டிசம்பர் 06 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்!, - வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

Image
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான பாசிச எதிர்ப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தூத்துக்குடி தொகுதி திரேஸ்புரம், மேட்டுப்பட்டி திடலில், எஸ்டிபிஐ கட்சியின் M. ஷேக் அஷ்ரப் அலி ஃபைஜி மாவட்ட தலைவர் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி தொகுதி செயலாளர் K.M.J. ரியாஸ் வரவேற்பு உரையாற்ற, எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி தொகுதி துணைத் தலைவர் T. எடிசன் நன்றியுரையாற்றினார். எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் M. மைதீன்கனி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும், எஸ்டிபிஐ கட்சியின் மாநில மீனவர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் M. H. கெளது மைதீன், எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் S.அஜீஸ் B.Sc., BL.,, எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி தொகுதி தலைவர் A. காதர் உசேன், எஸ்டிபிஐ கட்சியின் தூ...

"தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் மழை பாதிப்புகளை சீர் செய்ய வேண்டும்" - மேயரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை!

Image
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்ய வேண்டும் என்று மேயரிடம் வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.  தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை சரி செய்து, நுழைவு வாயிலில் வாகனம் நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்தி தருமாறு மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.  இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் மேயர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் வாரியர், மாநகராட்சி வழக்கறிஞர் தொல்காப்பியன், துணை தலைவர் சிவசங்கர், பொருளாளர் கணேசன், துணை செயலாளர் பாலகுமார், செந்தமிழ் செல்வி, ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்

"தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் திட்டப்பணிகளை தொடா்ந்து முதலமைச்சா் முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றி வருகிறோம்" - மேயர் ஜெகன் பொியசாமி தகவல்.!

Image
  தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆரம்பமாக போகும் புதிய வடிகால், சாலை, பூங்கா பணிகள் மற்றும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரும் தெப்பக்குளம் பூங்கா மற்றும் நடைபெற்று வருகின்ற பல பூங்காக்கள் கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிப்பது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான கூட்டம் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.  அப்போது மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில்:- "மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் பாராபட்சமின்றி அனைத்து துறை அதிகாாிகள் அலுவலர்கள் இணைந்து ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டாா்.  கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளா் ராஜேஷ்கண்ணா, இளநிலை பொறியாளர்கள் செல்வம், பாண்டி, லெனின், மற்றும் பொறியியல் துறை அலுவலர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.  பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில்:- "திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று 55 மாதங்கள் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 2008ம் ஆண்டு மா...

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து 3 கப்பல்களில் நிவாரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

Image
  தூத்துக்குடி டிட்வா புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான இலங்கைக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பி வைத்ததை தொடர்ந்து, வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான எல்சியு 51, 54, 57 ஆகிய மூன்று கப்பல்களில் சுமார் 300 டன் எடையுள்ள நிவாரண பொருட்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதாஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னா் அமைச்சா் கீதாஜீவன் கலெக்டா் இளம்பகவத் மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோா் கப்பலை முழுமையாக சுற்றிப்பாா்த்தனா்.  அமைச்சா் கீதாஜீவன் கூறுகையில்:- "சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து மொத்தம் ரூ. 7,65,06,500 மதிப்பீட்டிலான பருப்பு வகைகள், சீனி, பால் பவுடர், சேலைகள், வேட்டிகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், தார்பாய்கள் உள்ளிட்ட 945 மெட்ரிக் டன் எடையுள்ள நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன" என்றாா்.  உடன் கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, ஆணையர் ப்...

தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை.

Image
  தூத்துக்குடி அம்பேத்கர் 69வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியாசமி ஆகியோா் தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளார்கள் நல வாாிய தலைவர் ஆறுச்சாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவீந்திரன், சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன்,  பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம்,  மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அபிராமிநாதன், அந்தோணிஸ்டாலின், பெருமாள், நிக்கோலாஸ் மணி, சேசையா, ரமேஷ் அருணாதேவி, அருண்குமார், பழனி,  மாநகர அணி நிர்வாகிகள் முருக இசக்கி, கிறிஸ்டோபா் விஜயராஜ்,  சாரதி, ஆனந்தசேகா்,  வினோத், சத்யா, செய்யதுகாசிம், மகேஷ்வரன்சிங், ரவி, பால்ராஜ், கருப்பசாமி, ராஜேந்திரன், காளிதாஸ், வக்கீல் ரூபராஜா, பிக்அப் தனபாலன், நாராயணவடிவு, செந்தில்குமாா், கவு...

இண்டிகோ விவகாரத்தால் பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம் -சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.5,400 இருந்த நிலையில், தற்போது ரூ. 57,700 கட்டணம்.!பயணிகள் அதிர்ச்சி.!

Image
  இண்டிகோ விமான சேவை பாதிப்பு எதிரொலி 2வது நாளாக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பல மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம் சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.5,400 கட்டணமாக இருக்கும் நிலையில், தற்போது ரூ. 57,700 கட்டணம் நிர்ணயம் பெங்களூரு செல்வதற்கு ரூ.6,000 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ.18,200 ஆக உயர்வு திருச்சிக்கு ரூ.4,600 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ. 26,700 ஆக அதிகரிப்பு விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி

தூத்துக்குடி :தொடர் கதையாகும் போக்குவரத்து நெரிசல் - 2ம் கேட் முதல் கருத்த பாலம் வரையிலான சாலையை "ஒரு வழிப் பாதையாக" மாற்றிட காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள்.!

Image
தூத்துக்குடியில் தினம் தினம் போக்குவரத்து நெரிசலால் தினறும் 2ம் கேட் முதல் கருத்த பாலம் வரையிலான சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றிட மாவட்ட காவல்துறைக்கு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட 2ம் இரயில்வே கேட் சந்திப்பில் இருந்து கருத்தபாலம் வரை செல்லும சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. குறுகிய சாலையான இதில் SR மருத்துவமனை மற்றும் ரெங்கநாதன் மருததுவமனைகள் உள்பபட பிரபல  திருமண மணடபமுமான அபிராமி மஹாலும் உள்ளது. மேற்படி சாலை குறுகலாகி மேல் பகுதியில் விரிந்து கொள்வதால் வாகன போக்குவரத்தில் பெரிதும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரயில்வே கேட் மூடபட்டால் குறுகலான பாதையை பயன்படுத்த முடியாத நெருக்கடியும் தொடர்கிறது. இதில் மினி பேருநது உள்ப்பட கனரக வாகனங்களும் இந்த வழித்தடத்தை  போக்குவரத்துக்காக பயன்படுத்திக் கொள்வதால் இசசாலையில் கூடுதல் நெருக்கடிகளை  பொதுமக்கள் நித்தம் சந்திக்கின்றனர். மருத்துவ தேவைக்கான அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் முதல் ஆட்டோ வரை இச்சாலையை கடப்பதில் ஏற்படும் சிரமம் சொல...