Posts

திருப்பூர் தெற்கில் வெற்றி பெறுவோம்... அதிமுக, பாஜக, அமமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சூளுரை

Image
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருப்பூர் தெற்கு தொகுதியில் தாராபுரம் சாலை புதூர் பிரிவில் தேர்தல் பணிமனையினை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் பணிமனையினை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன், மாநில நிர்வாகி மலர்க்கொடி, செந்தில்வேல், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அதிமுக திருப்பூர் மாநகர மாவட்ட அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பழனிச்சாமி, அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான விசாலாட்சி, தமாக மாவட்ட தலைவர் சிறுமுகை ரவிக்குமார், அதிமுக நிர்வாகிகள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், அட்லஸ் லோகநாதன், இந்துமுன்னணி நிர்வாகிகள் கிஷோர்குமார், கொங்குநாடு விவசாயிகள் கட்சி நிர்வாகி கொங்குராஜாமணி, மஜமுக இப்ராஹிம் பாதுஷா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.  தேர்தல் பணிமனையை திறந்து வைத்து முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாத...

2 இலட்சம் ரூபாய் பண மாலையால் எழுந்த சர்ச்சை- அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் தேர்தல் விதிமுறையை மீறுகிறாரா?

Image
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் உள்ள பண்டார விளை பகுதியில் நடைபெற்ற ஒரு அரசியல் நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..  தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற வேட்பாளருமான சண்முகநாதனுக்கு, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன், 500 ரூபாய் நோட்டுகளால் கட்டப்பட்ட சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பண மாலையை அணிவித்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த நிகழ்வு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக அமைப்பாளர் செல்வகுமார் சம்பவத்தின் புகைப்படங்களை இணைத்து தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக முறையான புகார் மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார். தேர்தல் காலத்தில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் இருக்கும் நிலையில், சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை வெளிப்படையாக மாலையாக பயன்படுத்தியிருப்பது விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

சாத்தான்குளம் வழக்கு : "ஆயுள் தண்டனை அச்சம் தராது ,9 பேருக்கும் மரண தண்டனை.!" - நீதிமன்றம் அதிரடி

Image
  சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 23-ம் தேதி நீதிபதி முத்து குமரன் தீர்ப்பளித்தார். தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் மாநில அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் மார்ச் 30-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் இந்த வழக்கு ஏப்ரல் 2-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி சாத்தான் குளம் வழக்கானது மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், இன்று அந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த தீர்ப்பில்,`` தந்தையையும், மகனையும் ஒருவர் முன் ஒருவர் நிர்வாணப்படுத்தி, மனம்போனபோக்கில் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தைப் படிக்கும்போதே மனம் பதைபதைக்கிறது. காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை அச்சம் தராது. மரண தண்டனை விதிப்பதே சிறந்தது" எனக் கூறப்பட்டி...

"விதிப்படி எல்லாம் நடக்க முடியாது, உள்ளே விட்றியா இல்லையா " - தூத்துக்குடி காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் முன்னாள் சேர்மன்

Image
தூத்துக்குடி தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளன்று    தூத்துக்குடி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் டுவிபுரத்தில் உள்ள அதிமுக தலைமை காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.  வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே செல்ல அனுமதி. இந்த நிலையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு நபர் உள்ளே சென்று விட்டார் அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் வெளியே சென்றால் மட்டுமே வேட்புமனு பெற முடியும் என்று அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனிடம் தேர்தல் அதிகாரி கூறிவிட்டார். இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையின் வெளியே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவேகம் ரமேஷ் மற்றும் இரண்டு பேர் உள்ளே செல்ல முயன்றனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இருவரையும் உள்ளே செல்ல விட முடியாது சரியான ஆட்கள் உள்ளே சென்று விட்ட...

தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் ஊா்வலமாக சென்று வேட்புமனுதாக்கல்- அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆரம்பமே அமா்களம்.!

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறாா். இந்நிலையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தலைமையில் மேயா் ஜெகன் பொியசாமி, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் சகாயராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியர், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் முத்து, எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மைதீன்கனி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, சமத்துவமக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், முக்குலத்தாோ் புலிப்படை மாவட்ட செயலாளா் மணி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யூசுப், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளா் முகமது அசன், ஆகியோா் முன்னிலையில் மாா்த்தான்பட்டி சத்திரம் பகுதியில் மாவட்ட பிரதிநிதி சக்திவேல் த...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட்டில் அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் சூறாவளி தேர்தல் பரப்புரை.

Image
  தமிழக சட்டசபை தேர்தல் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  ஆங்காங்கே வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் சட்டமன்ற தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் சூறாவளியாக குடியாத்தம் தொகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களது இல்லத்துக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பை நடத்தி வருகிறார். அதன்படி 4ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளான கடாம்பூர் ,உமராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தே சென்று வீதி வீதியாக வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பரிதா. பரிதாவுடன் ஒன்றிய செயலாளர் பொகளூர் பிரபாகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் திரளாக புடைசூழச் சென்றனர். ஆங்காங்கே இருந்த தொழிலதிபர்களையும் அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமனை ...

"மக்களோடு பணியாற்றிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும், தோ்தலுக்காக மட்டும் வருபவா்களை புறக்கணிக்க வேண்டும்"- சாதனைகளை சொல்லி அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகாிப்பு.

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.  37 மற்றும் 42வது வாா்டு பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன்பொியசாமி பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, கவுன்சிலா் பாப்பாத்தி, வட்டச்செயலாளா்கள் சுரேஷ்மகாராஜா, மாாிமுனீஸ்வரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான எனக்கு அனைவரும் உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். காரணம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் குறைபாடுகள் என்றாலும் மக்களோடு மக்களாக எப்போதும் உங்களுடன் இருந்து பணியாற்றி வருகிறேன். அதிமுக பிஜேபி தவெக ஆகிய கட்சிகள் தோ்தலுக்கு முன்று மாதத்திற்கு முன்பு தான் நாங்களும் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு வருவாா்கள் ஆனால் 5 ஆண்டுகாலம் கொரோனா மழை வௌ்ளம் காலத்தில் என்ன நடந்தது கூட பாா்ப்பத்கு கூட வந்திருக்க ம...