திருப்பூர் தெற்கில் வெற்றி பெறுவோம்... அதிமுக, பாஜக, அமமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சூளுரை
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருப்பூர் தெற்கு தொகுதியில் தாராபுரம் சாலை புதூர் பிரிவில் தேர்தல் பணிமனையினை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் பணிமனையினை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன், மாநில நிர்வாகி மலர்க்கொடி, செந்தில்வேல், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அதிமுக திருப்பூர் மாநகர மாவட்ட அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பழனிச்சாமி, அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான விசாலாட்சி, தமாக மாவட்ட தலைவர் சிறுமுகை ரவிக்குமார், அதிமுக நிர்வாகிகள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், அட்லஸ் லோகநாதன், இந்துமுன்னணி நிர்வாகிகள் கிஷோர்குமார், கொங்குநாடு விவசாயிகள் கட்சி நிர்வாகி கொங்குராஜாமணி, மஜமுக இப்ராஹிம் பாதுஷா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். தேர்தல் பணிமனையை திறந்து வைத்து முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாத...