திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


 

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருப்பூரை ஒட்டி உள்ள மங்களம், காளிபாளையம், முதலிபாளையம், கணக்கம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம்,மேற்குபதி, பட்டம்பாளையம்,பெருமாநல்லூர், பொங்குபாளையம், சொக்கனூர், தொரவலூர், வள்ளிபுரம் ஆகிய ஊராட்சிகளில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வே.கனகராஜ் தலைமையில் நடந்த இந்த கிராம சபை கூட்டங்களில் 2800 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டங்களில் கிராம வளர்ச்சி குறித்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  ஜல் சக்தி அபியான் திட்ட செல்போன் செயலியில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்