கோபிச்செட்டிபாளையம் கோசணம் ஊராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், கோசணம் ஊராட்சியில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கோசணம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர் ,நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது, பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, வாரிசுசான்றிதழ். சாக்கடை வசதி ,உழவர் அட்டை ,தெருவிளக்கு வசதி போன்ற மனுக்கள் பெறப்பட்டது.முகாமிற்கு நம்பியூர் ஒன்றியகழக செயலாளர் தம்பி [எ]சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பேருராட்சி செயல் அலுவலர் எஸ்.சசிக்கலா, செல்வம்,ஊராட்சி செயலர் தனபதி, நில வருவாய் அலுவலர் அருணகிரி,கிராம நிர்வாக அலுவலர் கே.குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்