தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா... 15,510 ஆனது மொத்த பாதிப்பு

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.சென்னையில் மட்டும் 710 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.


இதில் தமிழகத்தில் வசிப்பவர்கள் 710 பேர், வெளிமாநில, மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என மொத்தம் இன்று 759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதன்மூலம் தமிழகத்தில் மட்டும் 15,512 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இன்று 5 பேர் இறந்ததுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 103 ஆக உள்ளது.


இன்று மட்டும் 12,155 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் இதுவரை 3,97,340 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.


 


இதுவரை 7491 பேர் குணமடைந்து வீடு சென்று விட்ட நிலையில், இன்னும் 7915 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 17 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருவண்ணாமலையில் 6 பேர் மற்றும் விழுப்புரத்தில் 4 பேரும் தொற்றுக்கு ஆளாகி உள்ளது தெரிய வருகிறது.


 


 


 


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்