Posts

Showing posts from June, 2021

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பெற்றோரை இழந்த 3,499 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளது அமைச்சர் கீதாஜீவன் தகவல்.!

Image
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அருகே சமூக நலத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைந்த சேவை மைய  சுமார் 48 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார் மேலும் புதிதாக பதிவு செய்த திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் "குடும்பத்தில் மட்டுமின்றி சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கு இந்த ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட உள்ளது எனவும் இதன்மூலம் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் இந்த மையங்களில் தங்கியிருந்து தங்களின் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்  மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த 93 குழந்தைகள் மேலும் ஒரு பெற்றோரை இழந்த 3499 குழந்தைகள் கண்டறியப்பட்டு உள்ளது  இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் அதற்கான உதவியும் செய்யப்பட்டு வருகிறது இந்தத் திட்டம் வேகமாக மக்களை சென்ற...

தமிழகத்தின் 30வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்பு.!

Image
புதிய டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு காவல்துறை சார்பில் வரவேற்பு மரியாதை சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும காவலர்கள் பொதுமக்களிடம் மனிதாபிமானமாக நடக்க வேண்டும். முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு.

வல்லநாட்டில் செல்போனில் நேரத்தை செலவிட்ட தங்கையை அரிவாளால் வெட்டிய அண்ணன்.!

Image
தூத்துக்குடி அருகே உள்ள வல்லநாடு   வசவப்பபுரம்  பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலைமுத்து. விவசாயியான இவருக்கு மனைவியும் மூன்று மகளும் ஒரு மகனும் உள்ளனர். அதில் மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகவிட்டது. மாலைராஜா ( 20) என்ற மகனுக்கும்  கவிதா (17) என்ற மகளுக்கும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் கவிதா தனது செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இதை அவரது அண்ணன் மாலைராஜா கண்டித்துள்ளார். பல தடவை கண்டித்தும் கவிதா செல்போனில் நேரத்தை செலவிடுவதை நிறுத்தாத நிலையில் அவரது அண்ணன் மாலை ராஜா நேற்று மீண்டும் கண்டித்துள்ளார் . இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த  அண்ணன் மாலை ராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக தங்கை கவிதாவை வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீஸ்  இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கவிதாவை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்,  தூத்துக்குடி மாவட்ட ...

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: சசிகலா மீது வழக்குப்பதிவு.!

Image
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா உள்பட 501 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கடந்த 9-ந்தேதி திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 7-ந்தேதி வி.கே.சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளை தெரிவித்தேன். அதற்கு வி.கே.சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், தன் அடியாட்களை வைத்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள். மேலும் செல்போனிலும் என்னை அச்சுறுத்தும் வகையில் 500 பேர் கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். சசிகலா மீது வழக்குப்பதிவு செல்போன், சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வி.கே.சசிகலா பற்றி பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். இதற்கு வி.கே.சசிகலாவின் தூண்டுதலே காரணமாகும். எனவே கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாக பேசவும் காரணமாக இருந்த வி.கே....

திருப்பூர் மாவட்ட செய்திகள், விழிப்புணர்வு பிரசாரத்தில் #TirupurTalks

Image
 திருப்பூர் மாவட்டத்தின் செய்திகள் மற்றும் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக சமூக வலைத்தளங்களான Twitter மற்றும் Facebook ல் #TirupurTalks எனும் பெயரில் தொடர்ந்து வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தேவைப்பட்டால் களம் இறங்கி போராடுவோம் - ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார்.!

Image
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையம் 5வது மற்றும் 6வது அணு உலைக்கான கான்கிரீட் பணி இன்று தொடங்கியது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி  அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் இன்று மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுப.உதயகுமார், கூடங்குளம் அணு உலை ஏற்கனவே பழுது உள்ளிட்ட பல்வேறு  காரணங்களால் பல நேரங்களில் செயல்படாத நிலையில் தற்போது 5வது 6வது அணு உலை விரிவாக்கத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.  தமிழக மக்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய இந்த கூடங்குளம் அணு உலையை முழுவதுமாக இழுத்து மூட வேண்டும்.  கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மூன்று ஆண்டுகளாக மக்கள் ஒன்று திரண்டு போராடினர் மக்களின் கோரிக்கையை அப்போதைய மத்திய அரசும் மாநிலத்தில் இருந்த அதிமுக அரசு ம...

தூத்துக்குடி மாநகரில் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் - அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.!*

Image
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாநகரில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர் சேர்மக்கனி உதவி ஆணையர்கள் சரவணன்,சேகர்,காந்திமதி  பிரின்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் கூறியதாவது: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது இதில் அனைத்து பகுதிகளுக்கும் சரியான அளவு குடிநீர் சரியான நேரத்தில் வழங்க வேண்டும். சில இடங்களுக்கு குடி நீர் வருவதில் சிரமம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.குறிப்பாக சத்தியாநகர்,லேபர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சரியாக கிடைக்கவில்லை என்பது குற்றச்சாட்டு எழுந்துள்ளது தற்போது பல இடங்களில் வடிகால் வசதிகள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அத்துடன் கழிவுநீர் கலந்து விட்டதாக கூறப்படுகிறது எனவே இவை அனைத்தையும் சரி செய்து பணிகளை விரைந்து முடித்து மக்களுக்க...

13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது.!*

Image
 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது.!* தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அக்பர் ஷா தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் முத்துவாப்பா (25). இவர்  13.04.2021 அன்று 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்து வாப்பா என்பவரை கைது செய்து சிறையிலடைத்தார்.

கோரம்பள்ளம் குளம் மற்றும் உப்பாத்து ஓடையில் சீரமைப்பு பணி - ஆட்சியர் செந்தில் ராஜ், ஆய்வு

Image
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளம் மற்றும் உப்பாத்து ஓடையில் நிரந்தர சரீ மைப்பு பணிகள் மதிப்பீடு தயாரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.  கோரம்பள்ளம் குளம் பொட்டல்காடு மதகு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு மதகு பகுதியில் உள்ள பழுதுகளை நீக்கி சீரமைப்பு செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  தொடர்ந்து கோரம்பள்ளம் குளம் இரட்டை மதகு பகுதியில் பாசனத்திற்கு செல்லும் பகுதியில் உள்ள மதகுகளை நேரில் பார்வையிட்டு பழுதுகளை நீக்கம் செய்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  அதனைத்தொடர்ந்து கோரம்பள்ளம் அத்திமரப்பட்டி உப்பாத்து ஓடை 24 கண் மதகு பகுதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்செந்தில் ராஜ்,நேரில் சென்று பார்வையிட்டார்.  மேலும் உப்பாத்து ஓடை நிரந்தர சீரமைப்பு பணிகள் ரூ.59.50 கோடி மதிப்பீட்டில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள பணி விபரங்களை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருத்தத்ஜெய் நாராயணன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அ...

மணியாச்சி அருகே கணவனை கொலை செய்த மனைவி கைது.!

Image
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழபூவாணி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரியப்பன் (56) இவரது மனைவி பேச்சியம்மாள் (44). இருவரும் தங்களுக்குள் ஏற்ப்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 வருடங்களாக தனியாக வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று  மாரியப்பன் கீழபூவாணியில் உள்ள ஒரு புஞ்சை நிலத்தில் கல்லால் தாக்கப்பட்டு படுகாயத்துடன் கிடந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் பாளையங்கோட்டை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மணியாச்சி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நேற்று மாலை பேச்சியம்மாள் கீழபூவாணியில் உள்ள ஒரு புஞ்சை நிலத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, அப்போது  அங்கு குடிபோதையில் வந்த மாரியப்பன் பேச்சியம்மாளிடம் தகராறு செய்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த பேச்சியம்மாள் கல் மற்றும் கம்பால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாரியப்பன் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மணியாச்சி காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தன் ம...

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 25 கோடி மதிப்பீட்டில் படகு அணையும் சுவர் பணி - கனிமொழி எம்.பி,அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்..!

Image
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 25 கோடி மதிப்பீட்டில் கூடுதல் படகு அணையும் சுவர் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது  நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்,மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மண்டல இணை இயக்குநர அமல்சேவியர், மீன்வளத்துறை, மீன்பிடி துறைமுக திட்டக் கோட்ட செயற்பொறியாளர் கங்காதரன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன், மீன்வளத்துறை மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு உதவி இயக்குநர் அன்றோ ,  முன்னாள் சடட் மன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி,மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர...

தாளமுத்து நகரில்1.100 கிலோ கஞ்சா விற்றவர் கைது கைது செய்த தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டு.!

Image
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  உத்தரவின்பேரில் தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில்  தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், சங்கர், தலைமை காவலர் பென்சிங், முதல் நிலை காவலர் செந்தில்குமார், முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ்,  மகாலிங்கம்,சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் அருகே கோவில்பட்டி இலுப்பையூரணியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் வினோத்குமார் (23) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி எதிரியை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்த தனிப்படையினரை ...

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ.கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு அறிவிப்பு..!

Image
மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ.கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு அறிவிப்பு. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும் கமல்ஹாசன் தொடர் ஆலோசனை. மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. தலைவர் பதவியுடன் சேர்த்து பொதுச் செயலாளர் பதவியையும் ஏற்கிறார் கமல்ஹாசன்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிப்பு- 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.!

Image
கொரோனா பெருந்தொற்று காரணமாக  தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், ஏற்கனவே மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை 1 - (11 மாவட்டங்கள்) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் வகை 2 - (23 மாவட்டங்கள்) அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்,...

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!*

Image
தூத்துக்குடி முத்தம்மாள் காலணியில் உள்ள வித்ய பிரகாசம் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை புணரமைத்தல் தொடர்பான மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், அலுவலர்களுடன் சென்று இன்று கள ஆய்வு மேற்கொண்டார்.  பழைய கழிப்பறையை அகற்றிவிட்டு மிகவும் பழுதடைந்துள்ளதால் அதை இடித்துவிட்டு கட்டுதல், காம்பவுண்டு உயரப்படுத்தும் வகையில் கிரில் அமைத்தல், வகுப்பறை முழுவதையும் புதுப்பித்தல் மற்றும் சிறப்பு  குழந்தைகளை பயிற்றுவிக்கும் வகையில் வசதிகளையும், பொருட்களையும் வைத்தல் தொடர்பாக ஆய்வு செய்தார். இதற்கான திட்ட மதிப்பிட்டினை உடனடியாக தயார் செய்து அறிக்கை அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ரூ.3 லட்சம்  மதிப்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார்.  தூத்துக்குடி மாவட்டம் குமரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.80 லட்சம் மதிப்பில் அமைகக் ப்பட்ட குப்பைகளை உரமாக மாறறு; ம் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், பார்வையிட்டா...

செய்தித்துறை அமைச்சர் நடத்திய கலந்தாய்வில் பங்கேற்று பத்திரிகையாளர் கோரிக்கைகளை வலியுறுத்திய தி நேஷனல் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (இந்தியா) நிர்வாகிகள்.!

Image
சென்னை கலைவாணர் அரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று பத்திரிகையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கையை கேட்கும் விதமாக கலந்தாய்வு நிகழ்வு நடத்தினார்.  துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இயக்குனர் முனைவர். வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில், தி நேஷனல் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (இந்தியா) சார்பில் மாநில  துணை தலைவர் எஸ். மணிகண்டன், துணை செயலாளர் கே.விஜய், மகிளா பிரிவு செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் பங்கேற்று பத்திரிகையாளர் கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.  அப்போது, ' புருஸ்ஸல்சில் உள்ள  இன்டர்நேஷனல் பெடரேஷன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் என்ற உலகளாவிய அமைப்பின் அங்கமான எமது தி நேஷனல் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (இந்தியா) வின் செயல்முறை திட்டங்கள் விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தமைக்கும், நிவாரண நிதி ரூ.5000 வழங்கியமைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம்  இயற்றிடவும்,  பத்திரிகையாளர் நலவாரியம் அமைத்திடவும் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது...

கோவில்பட்டியில் பிரபல ரவுடி குண்டாசில் கைது - மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை.!

Image
கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AKS தியேட்டர் ரோடு பகுதியில் கோவில்பட்டி போஸ் நகரை சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் கணேசன் (எ) குடஞ்சான் கணேசன் (27) மற்றும் அவரது நண்பர்கள் மருது பாண்டி (27) மற்றும் சின்னஜமீன் (30) ஆகியோர் 31.05.2021 அன்று ஒருவரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கணேசன் (எ) குடஞ்சான் கணேசனை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  மேலும் மேற்படி எதிரி  கணேசன் (எ) குடஞ்சான் கணேசன் என்பவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 19 வழக்குகள் உள்ளது குறிப்படதக்கது.  இவ்வழக்கின் முக்கிய எதிரியான கணேசன் (எ) குடஞ்சான் கணேசன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்க...

திருக்கோவிலூர் அருகே கால்களே இல்லாமல் பிறந்த கன்று.!

Image
திருக்கோவிலூர் வட்டம் பழங்கூர் கிராமத்தில் வசிக்கும் வீராசாமி மகன் ராஜேந்திரன் என்பவர் நாட்டு மாடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வளர்க்கும் பசு மாடுகளில் ஒன்று கன்று ஈன்றது, அந்தக் கன்றுக்கு நான்கு கால்களும் இல்லாமல் பிறந்தது. இதை ஊர் மக்கள் அதிசயமாக பார்த்து வருகிறார்கள்

ஈரோட்டில் குழந்தை திருமணம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாத்திட காக்கும் கரங்கள் என்ற பெயரில் 34 குழுக்கள்.!

Image
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக கொரானா தொற்று ஊரடங்கு காலக்கட்டத்தில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதால் அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக, ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றப் பிரிவு தலைமையில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்கள், பெண்காவலர்கள், சைல்டுலைன் அலுவலர்கள்,குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் அலுவலர்கள் மற்றும்  அந்தந்த பகுதியைச் சேர்ந்த சமுதாய தொண்டாற்றுபவர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு ‘காக்கும் கரங்கள்” என்ற பெயரில் 34 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழுவானது குழந்தைத் திருமணங்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அடிக்கடி நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று, மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அ...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மாசார்பட்டி பகுதி மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் - மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார்.!

Image
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு  மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாசார்பட்டி ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 80 பேருக்கு இன்று அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் உத்தரவின்பேரில், மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது, மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் உட்பட காவல்துறையினர் மற்றும் மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாத்துரை, மேலக்கரந்தை ஊராட்சி மன்ற தலைவர் முத்து முனியம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் - கனிமொழி எம்பி வெளியிட்டு பார்வையிட்டார்.!

Image
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாகனங்கள் மூலமாக தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியத்தையும், கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும்  வீடியோ மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் , உதவி ஆட்சியர் ஸ்ருத்தஞ் ஜெய்  நாராயணன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!

கோவில்பட்டியில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பால்பண்ணை - ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சந்தீப் நகரில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பால்பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பால்பண்ணையினை ஆய்வு செய்து அந்த பகுதியில் வசிக்கும் 30 குடும்பத்தினருக்கு தேவையான குடிநீர், மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மேலும் கோவில்பட்டி திலகரத்னா தீப்பெட்டி தொழிற்சாலை,  கோவில்பட்டி ஸ்ரீபாலாஜி உட் அண்டு ஸ்கினிங் வால்ஸ் தீப்பெட்டிக்கு பயன்படுத்தப்படும் தீக்குச்சி தொழிற்சாலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிந்து தொழிலாளாகள் பணிபுரிகிறார்களா என நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  எட்டயபுரம் வட்டம் குளத்துவாய்பட்டி இலங்கை அகதிகள் முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் 31 குடும்பத்தினருக்கு தேவையான குளியல் அறை, கழிப்பிடம், தண்ணீர், கழிப்பிடம், தார் ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றிட உரிய அலுவலர்களுககு; உத்தரவிட்டார். ஆய்வின்போது கோவில்பட்டி வர...

நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து காவல்துறையினர் செயல்பட வேண்டும் - கனிமொழி MP

Image
"சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும்.  நடப்பது  திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்." - சேலம் சம்பவம் குறித்து தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி MP

லத்தியால் கொடூரமாக தாக்கிய போலீஸார்; சுருண்டு விழுந்த விவசாயி பலி! - எஸ்ஐ மற்றும் காவலர் கைது.!

Image
குடிபோதையில் இருந்த விவசாயியை, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் விவசாயி பலியானார். இதனையடுத்து லத்தியால் தாக்கிய எஸ்ஐ மற்றும் காவலர் கைது செய்யப்பட்டதுடன், இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.  சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த இடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (எ) முருகேசன். விவசாயியான முருகேசன் இடையம்பட்டியில் மளிகைக் கடையும் நடத்தி வந்துள்ளார். கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதால் சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், அருகிலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை முருகேசன் மது அருந்தச் சென்றிருக்கிறார். மது அருந்திவிட்டு நேற்று மாலை வீடு திரும்புகையில், இடையப்பட்டி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் முருகேசன் மற்றும் அவருடைய நண்பர்களை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது மதுபோதையிலிருந்த முருகேசனுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் கோபமடைந்த போலீஸார் முருகேசனை லத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். முருகேசனை அ...

மாப்பிள்ளையூரணியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கனிமொழி எம்.பி ஆய்வு.!

Image
  தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள ராம்தாஸ் நகர்,சிலோன்காலனி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அகதிகள் முகாமில் உள்ள இளைஞர்கள், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் அவர்கள் இருக்கும் குடியிருப்புகளை கனிமொழி எம்.பி., பார்வையிட்டார். திமுக அரசு, அகதிகள் முகாமிற்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மக்களிடம் உறுதி அளித்தார். தொடர்ந்து அங்கு உள்ள 75 குடும்பங்களுக்கு எம்.பி நிதியில் இருந்து 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஜஸ்டின்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், வசந்தா மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

தேர்தலின்போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்க்கு ரூபாய் 15 லட்சம் உதவித் தொகை - கனிமொழி MP வழங்கினார்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த கொம்மடிகொட்டை கிராமப் பள்ளியில் ஆசிரியர் சமுத்திர பாண்டி என்பவருக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட 15 லட்சத்துக்கான காசோலையை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  கலந்துகொண்டு தேர்தல் ஆணையத்தின் மூலம் அன்னாரது வாரிசு தருவதற்கான மனைவி கங்காதேவி மகன்கள் கதிர்காம வேல்,கதிர்காமதுரை ஆகியோருக்கு தலா 5 லட்சம் வீதம் ரூபாய் 15 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பாக இருந்த சமுத்திரபாண்டி மனைவிக்கு 2.60 லட்சத்துக்கான காசோலையை கனிமொழி கருணாநிதி வழங்கினார்  நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர் பயிற்சி  ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, தேர்தல் வட்டாட்சியர் ரகு, ...

தூத்துக்குடியில் (ஜூன் 22) இன்று முதல் ஜூன் 25ம் தேதி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.!

Image
தூத்துக்குடியில் உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், மின்கம்பங்களை சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் காரணமாக ஜூன் 22 முதல் 25வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி நகர மின் விநியோக கோட்ட செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட கீழ்கண்ட உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் ஆங்காங்கே மின்பாதையில் அறுந்து தொங்கி கொண்டிருக்கும் பட்டங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 22.06.2021 முதல் 25.06.2021 வரை காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. 22.06.2021 நேரம் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை 110/22-11கே.வி. அய்யனார்புரம் துணைமின் நிலையம் கிழக்கு காமராஜ் நகர், ஓம்சக்தி நகர், கீழஅலங்காரத்தட்டு, மேட்டுப்பட்டி, ஜீவா நகர், லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, திரேஸ்புரம், பூபால்ராயபுரம், கருப்பட்டி சொசைட்டி, குரூஸ்புரம், எஸ்எஸ் ம...

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் - கனிமொழி எம்.பி. சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் மரியாதை.!

Image
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் - கனிமொழி எம்.பி,சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் மரியாதை.! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது சாத்தான்குளத்தில் அவரது கடையின் முன்புறம் வைத்திருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்பி மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மலையம்பாளையம் காவல் நிலையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள்- காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் வழங்கினார்.!

Image
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி  கொடுமுடி தாலுகா மலையம்பாளையம் காவல் நிலையமும், மாற்றுத் திறனாளிகள் நல முன்னேற்ற சங்கமும் இணைந்து பொருளாதாரத்தில் நலிவடைந்த மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது  நிகழ்ச்சிக்கு மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் கலந்துகொண்டு 20 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் இளைஞர் நல முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி, பொதுச் செயலாளர் சுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட தலைவர் பரமசிவம், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் சுதாகர், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கொரோன இரண்டாவது அலையில் நலிவடைந்த ஏழை மாற்றுத்திறனாளிகள்  குடும்பங்களுக்கு , மாற்றுத்திறனாளிகள் இளையோர் சங்கம் சார்பாக  இதுவரை 4,000 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியுள்ளார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருடன் மின்சார வாரிய தொமுச நிர்வாகிள் சந்திப்பு

Image
 புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக இருந்த கவிதா ராமு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இங்கு ஆட்சியராக இருந்த பி. உமாமகேஸ்வரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக மாற்றப்பட்டார். இதையடுத்து, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் இந்நிலையில்   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மதிப்புக்குரிய  ஆட்சியர்  கவிதா ராமு.  ஐ.ஏ.எஸ்  அவர்களை மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் திருப்பூா் ஈ.பி. அ.சரவணன், புதுக்கோட்டை இராமு (எ) ஜெயராமன், இராமு தீபா உள்ளிட்டோர்கள் நேரில் சந்தித்து பொன்னடை அனிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் கொரானா நோய் தொற்று காரணமாக ஊரட‌ங்கு காலத்தில் மின்சார பணிகளை மேற்கண்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென மின்சார வாரிய தொமுச சார்பில் வலியுறுத்தப்பட்டது.

திருச்செந்தூரில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள அம்பர் கீரிஸ் வாசனை திரவியம் பறிமுதல்

Image
திருச்செந்தூரில் போலீசாரின் வாகன சோதனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள அம்பர் கீரிஸ் எனப்படும் திமிலங்கத்தின் உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உட்கோட்டம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீசார் திருச்செந்தூர் நகரப்பகுதிகளில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திருச்செந்தூர் தாலுகா ஆபீஸ் ரோடு, அழகர் லாட்ஜ் முன்பாக சந்தேகத்தின் அடிப்படையில் வந்த  ETIOS என்ற நான்கு சக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் வந்த பன்னீர்செல்வம், தஞ்சாவூர் மாவட்டம், பாளையபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் இளங்கோவன் (52),  அருப்புகோட்டை வாமபுரம், செங்குளத்தைச் சேர்ந்த ராமசந்திரன் மகன் ராம்குமார் (27), ஜெகபர் சாதீக் மகன் முஹம்மது அஸ்லம் (33), நாகப்பட்டணம் ஆலியூர், வடக்கு தெரு  இதயத்துல்லா மகன் ராஜா (எ) ராஜா முஹம்மது (34), திருச்சி  அரியமங்கலம் திருமகல் தெரு குமார் மகன் வெங்கடேஷ் (48), தஞ்சாவூர் மாவட்டம் யாகப்ப நகர் 4வது ...

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலி!

Image
வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 5 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Image
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு குழு உருவாக்கப்படும்.   குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.  குறைகளை தீர்க்க ஹெல்ப் லைன் எண், மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும். ஆன்லைன் வகுப்பில் கண்ணியமான உடை அணிய வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள்.

நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் பேட்டி.!

Image
நீட் தேர்வு பாதிப்பு குறித்த தகவலை தொடர்ந்து திரட்டி வருகிறோம்.  நீட் தேர்வின் பாதிப்பு பற்றி இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.  அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்த பின் எங்களது அறிக்கை இறுதி செய்யப்படும்.  நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

பப்ஜி மதன் மீது மத்திய குற்றப்பிரிவில் குவியும் புகார்கள்.!

Image
  JUSTIN பப்ஜி மதன் மீது மத்திய குற்றப்பிரிவில் குவியும் புகார்கள்.! மத்திய குற்றப்பிரிவு அறிவித்த இ மெயிலில் 100 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன* மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக தமிழகம் முழுவதும் இருந்து  குவியும் புகார்கள்

தூத்துக்குடியில் மான்கொம்பு வீச்சரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த இளைஞர் கைது மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் நேரில் விசாரணை.!

Image
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 4 மான் கொம்பு, 5 வீச்சு அரிவாள், 4 கத்தி மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடைய குத்துக்கம்பி போன்ற பயங்கர ஆயுரங்கள் வைத்திருந்தவர் கைது - சாயர்புரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான சாயர்புரம் போப்ஸ் கல்லூரி முன்பு சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ராஜேந்திரன், தலைமைக் காவலர்கள் சங்கர், இன்பராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர் நேற்று வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவத்தையாபுரம் சாமிகோவில் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஆனந்த சேகர் (38) என்பவரை சோதனை செய்ததில், அவரது பைக்கில் 1 மான் கொம்பு, 1 கத்தி, 1 மற்றும் வீச்சு அரிவாள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரைக் கைது செய்து, மேற்படி மான் கொம்பு மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

"வாக்களிக்காதவர் என பாரபட்சமின்றி மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும் " - சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை.!

Image
சென்னை : கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு, கூடும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும். வணக்கம் எனவும் தமிழ் இனிமையான மொழி எனவும் கூறி உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அவர் உரை நிகழ்த்தியது பின்வருமாறு.. *எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் இது ஊழலை அகற்றிவிடும் இது எனது செய்தி. *தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாரபட்சமின்றி மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும். சமூக நீதி, சமுத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாக இந்த அரசு செயல்படும். *மாநில சுயாட்சி இலக்கை எட்ட தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு பரிசீலித்து நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.தமிழை இந்திய அலுவல் மொழியாக ஆக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். *கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது பாராட்டுக்கள். தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கொரோனா தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. *மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மீதான பு...

அதிகாரத்தை எதிர்த்தால், வன்முறை ஏவப்படுகிறது!! - கனிமொழி எம்பி பேச்சு.!

Image
தூத்துக்குடி: அதிகாரத்தை எதிர்த்தால், அவர்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. இதை மக்கள் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து சென்று விடுகின்றனர் என தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி தெரிவித்தார்.  கடந்த ஆண்டு சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சித்திரவதைச் செய்யப்பட்டு உயிரிழந்தனர். காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவுற்றதை முன்னிட்டு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ( தமிழ்நாடு/ புதுச்சேரி ) சார்பாக இணைய வழியில் நடந்த நினைவேந்தல் நாள் கருத்தரங்கில், சாத்தான்குளம் பிரகடனம் வெளியிடப்பட்டது. 'உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன், சாத்தான்குளம் பிரகடனத்தை வெளியிட, தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணித்தலைவருமான கனிமொழி அவர்கள் பெற்றுக்கொண்டார். பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு, கனிமொழி நிறைவுரை ஆற்றினார். சாத்தான்குளம் பிரகடனத்தைச் செவ்வனே உருவாக்கியதற்காகக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார். கனிமொழி எம்பி மேலும் பேசியதாவது: ...

தமிழ் நாட்டு வரி வருவாயில் பெருமளவை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது; தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி.!

Image
சென்னை : தமிழ் நாட்டின் வரி வருவாயில் பெருமளவை மத்திய அரசேஎடுத்துக் கொள்வதால் தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் மீதான வாட் வரியை குறைப்பது தற்போது சாத்தியமல்ல என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மிகவும் இக்கட்டான பொருளாதாரச் சூழலில் கரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9 ஆயிரம் கோடியை அரசு செலவிட்டுள்ளது. ஆளுநர் உரை முடிந்ததும் அடுத்த 2 வாரத்துக்குள் தமிழகஅரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியாகும். நாங்கள் எதிர்பார்த்ததைவிட நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த 2014-ல் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்தியது. இதன்மூலம் 2019-20-ல் மத்திய அரசுக்கு கிடைத்த ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி வரி வருவாய் 2020-21-ல் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக அதாவது 63 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரூ.336 கோடி குறைந்துள்ளது.இந்த ஆண்டு மேலும் சில மாற்றங்களை செய்துள்ளதால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி இன...