மஹாத்மா காந்தி குறித்து தரக்குறைவான விமர்சனம்!! - இந்து சாமியார் காளிசரண் மஹாராஜ் மத்தியபிரதேசத்தில் கைது.!*


சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்த தர்ம சன்ஸாத் என்னும் மாநாட்டில் தேசப்பிதா மஹாத்மா காந்தியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்திய காளிசரண் மஹாராஜ் என்பவர் மத்தியபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26-ஆம் தேதி நடந்த நிகழ்சியில் பேசிய காளிசரண் மஹாராஜ், காந்தியை சுட்டுக் கொன்றதற்காக கோட்சேவுக்கு வணக்கம் தெரிவிப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பிரமோத் தூபே அளித்த புகாரின் பேரில், இரு பிரிவினருக்கு இடையே பகையை தூண்டும் வகையில் பேசியதாக காளிசரண் மஹாராஜ் மீது ராய்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோவில் இருந்த காளிசரண் மஹாராஜை சத்தீஸ்கர் போலீசார் கைது செய்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்