கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை வலியுறுத்தி அறவழியில் கவன ஈர்ப்பு கையெழுத்து முகாம் நடைபெற்றது. இதில் நம்ம கோபி பவுண்டேஷன் தலைவர் அனூப் தலைமையில் , டாக்டர் பிரபு முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் தங்கள் கையெழுத்தை பதிவு செய்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். மேலும் கோபி தோழமை இயக்கங்கள் அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு தங்களது ஆதரவுகளை பதிவு செய்தனர்.