சேதமடைந்துள்ள அரசு அலுவலக குடியிருப்பை அப்புறப்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் பாஜக கோரிக்கை.!

 

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில்  அமைந்துள்ள அரசு அலுவலக குடியிருப்பு பகுதி மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உயிர் சேதம் ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.அந்த கட்டிடத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி கட்டிடத்தை இடிக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ள அந்த கட்டிடத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி  கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சி நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

இதில் 20 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்  விஜயகுமார் , அமைப்புசாரா மாவட்ட துணைத்தலைவர் நல்லதம்பி மற்றும் நகர செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்