2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு - தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 மற்றும் 3ஆவது அலகுகளில் உற்பத்தி நிறுத்தம்.!

2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 மற்றும் 3ஆவது அலகுகள் மின் உற்பத்தி  நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, கடந்த சில மாதங்களாக 5 அலகுகளிலும் முழுமையாக மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. விசாகப்பட்டினத்திலிருந்து ஒரு லட்சம் டன் நிலக்கரி வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக, 5 அலகுகளிலும் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று 2 மற்றும் 3ஆவது அலகுகள் திடீரென இன்று நிறுத்தப்பட்டன. பராமரிப்பு பணி காரணமாக இரு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், 2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 அலகுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்