மணிமுத்தாறு அருவியில் குளித்த நபருக்கு ஆபத்தான நோய் கிருமி தொற்று ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ராம்நகர் 5 ஆவது தெருவில் வசித்து வந்தவர் 50 வயதான ராமச்சந்தின், மனைவி பெயர் கோமதி. இவருக்கு ஷ்யாம் (23) , தாரிணி (14) என இரு குழந்தைகள் உள்ளனர். நிறுவனங்களுக்கு வரி ஆலோசகராக செயல்பட்டு வந்த இவர் கடந்த அக்டோபர் 10ம் தேதி குடும்பத்தினருடன் மணிமுத்தாறு அருவிக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு இரண்டு நாட்களாக தலைவலி இருந்து வந்த நிலையில் அக்டோபர் 15ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு நாட்களில் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் மாத்திரைகளை சாப்பிட்டு வந்த அவர், தொடர்ந்து காய்ச்சல், தலைவலி வரவே 17ம் தேதியன்று தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து காய்ச்சல் வந்து கொண்டே இருந்ததால் 19ம் தேதி மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் "வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் 5 நாட்களுக்கு பிறக...
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை, அதன் நகைச்சுவையான எழுத்துப் பிழைக்காக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காசோலை ₹ 7,616 தொகைக்கு கையொப்பமிடப்பட்டது . 'சேவன் வியாழன் ஹரேந்த்ரா அறுபது' என்று குறிப்பிடப்பட்ட காசோலையின் புகைப்படத்தை பயனர்கள் பகிர்ந்து கொண்டனர் . சிலர் புகைப்படத்தைப் பார்த்து சிரிப்பை வரவழைத்தாலும், மற்றவர்கள் நாட்டின் கல்வி முறை குறித்து கவலைகளை எழுப்பினர். இமாச்சலப் பிரதேசத்தின் ரோன்ஹாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர், 'ஏழு' என்பதை 'சேவன்' என்றும், 'ஆயிரம்' என்பதை 'வியாழன்' என்றும், 'நூறு' என்பதை 'ஹரேந்திரா' என்றும் எழுத்துப்பூர்வமாக எழுதி, தொகையை சரியாக எழுதத் தவறியதாகக் கூறப்படுகிறது. மேலும், 'பதினாறு' என்பதை இறுதியில் 'அறுபது' என்றும் எழுதியுள்ளார். செப்டம்பர் 25ம் தேதியிட்ட காசோலை, அட்டர் சிங் என்ற பள்ளியின் ஊழியருக்கு வழங்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த தவறுகள் காரணமாக வங்கியால் அது நிராகரிக்கப்பட்டு, காசோலை வங்கியால் ரிட்...
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை அமைச்சராகவும் இருந்தவர். அவர் மனம் திறந்து பேசப்போவதாக கூறியதை அடுத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு கட்சிகளுக்கு செல்லப்போவதாகவும், ஒருங்கிணைந்த அதிமுக பற்றி பேசப்போவதாகவும் பல்வேறு பேச்சுகள் நிலவின. இந்த நிலையில் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘1972 ல் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொட்ங்கினார். 1973ல் அதிமுக சார்பில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவர் போட்டியிட்ட போது மாபெரும் வெற்றி பெற்றார். கோவையில் அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், அரங்கநாயகம் தலைவர், திருப்பூர் மணி மாறன் செயலாளர், என்னை பொருளாளராக நியமித்து இருந்தார். நாங்கள் முழுமையாக நின்று செயல்படுத்தி எம்.ஜி.ஆரை அழைத்து சென்றபோது, மகிழ்ச்சி தெரிவித்தார். 1977ல் நான் கோபியில் போட்டியிடுற போது, சத்தியமங்கலத்தில் என்னை எம்.ஜி.ஆர் நிற்க சொன்னார். அங்கு எனக்கு புதிய இடம் என்று கூறினேன், தனது பெயரை உச்சரிக்க சொன்னார்....