சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்- வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என கொலை மிரட்டல்.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் இருந்து வேம்பார் செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை நடத்தி வருவோர் பத்மநாதன் மகன் ராபின்சன் (43)  இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 

மேலும் இதனை வெளியில் தெரிவித்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனை எடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவிக்கவே விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மருத்துவர் ராபின்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் ராபின்சன் மீது 2015ல் இதேபோல் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி