கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் குடியிருப்பவர் ஆறுமுகம் (வயது 73). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். 

இதனால் வீட்டை பூட்டிவிட்டு மனைவிக்கு உதவியாக ஆறுமுகமும் மருத்துவமனையில் இருந்து வந்தார். இந்நிலையில் ஆறுமுகம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 


பதறிப்போன அவர் வீட்டிற்குள் சென்றபோது, பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. நகைகள், பணம் கொள்ளை அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் தங்க கம்மல்கள், தங்க காசுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. 

கொள்ளைபோன நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது குறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பெயரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!