கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் குடியிருப்பவர் ஆறுமுகம் (வயது 73). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். 

இதனால் வீட்டை பூட்டிவிட்டு மனைவிக்கு உதவியாக ஆறுமுகமும் மருத்துவமனையில் இருந்து வந்தார். இந்நிலையில் ஆறுமுகம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 


பதறிப்போன அவர் வீட்டிற்குள் சென்றபோது, பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. நகைகள், பணம் கொள்ளை அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் தங்க கம்மல்கள், தங்க காசுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. 

கொள்ளைபோன நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது குறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பெயரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்